பெங்களூரு, மே 15 - கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், சாதிய அடிப்படை யிலான அணிதிரட்டல்களை பாஜக மேற்கொண்டது. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்தது. பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கியது. இஸ்லாமியர் களின் 4 சதவிகித இடஒதுக்கீட்டை பறித்து, அவற்றை லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் பிரிவினருக்கு தலா 2 சதவிகி தம் என்ற அடிப்படையில் கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது. ஆனால், இந்த தந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை. பாஜக-வின் சுய ரூபத்தை புரிந்துகொண்ட கர்நாடக மக்கள், சாதிய அடிப்படையில் தங்களைப் பிரிக்கும் பாஜக-வுக்கு சரி யான பாடம் புகட்டியுள்ளனர். லிங்கா யத்துக்கள், ஒக்கலிகர்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், குருபா மக்கள், முஸ்லிம்கள், மராத்தாக்கள் என அனைத்துப் பிரிவினருமே வகுப்பு வாத பாஜக-வை வெறுத்து ஒதுக்கி யுள்ளனர். மேலும் இந்தப் பிரிவுகளி லிருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்களே அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக தரப்பில் பிராமணர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். பழங்குடியின ரோ, முஸ்லிம்களோ ஒருவர் கூட பாஜக-விலிருந்து தேர்வாகவில்லை. கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழை யும் 9 முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் ஆவர். லிங்காயத் சமூகப் பிரிவிலிருந்து 69 பேர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடு க்கப்பட்டு உள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பில் மட்டும் 45 பேர் தேர்வாகியுள்ளனர். பாஜக சார்பில் 20 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 2 பேரும், சுயேட்சையாக ஒரு வரும், கேஆர்பிபி கட்சி சார்பில் ஒரு வரும் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். ஒக்கலிக கவுடா சமூகப் பிரிவின ரைப் பொறுத்தவரை, காங்கிரசி லிருந்து 27 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 12 பேரும், பாஜக சார்பில் 10 பேரும், சுயேட்சையாக ஒருவரும், எஸ்கேபி கட்சி சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், ஒருவர் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். பட்டியல் வகுப்பினரில் 22 பேர் காங்கிரஸ் சார்பி லும், 12 பேர் பாஜக சார்பிலும், 3 பேர் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
குருபா சமூகப் பிரிவினரில் 8 பேர் காங்கிரஸ் சார்பிலும், 3 பேர் பாஜக சார்பிலும் தேர்வாகியுள்ளனர். எம்எல்ஏ -வாகி இருக்கும் 9 முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சி சார்பிலேயே தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மொத்தம் 15 முஸ்லிம் வேட்பாளர் களை நிறுத்தியிருந்தது. அவர்களில் 6 பேர் தோல்வியடைந்தனர். 9 பேர் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் மொத்தம் 22 முஸ்லிம் வேட்பாளர் களை நிறுத்தியும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஒவைசி தலைமை யிலான மஜ்லிஸ் கட்சி மற்றும் எஸ்டி பிஐ உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் நிறுத்திய வேட்பாளர்களும் ஒருவரும் வெற்றிபெறவில்லை. பாஜக-வோ 2018-ஆம் ஆண்டைப் போலவே, 2023-இ லும் ஒரு இஸ்லாமியாரை கூட வேட்பா ளராக நிறுத்தவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லில் நிறுத்தப்பட்டவர்களில், பிராம ணர்கள் 10 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக பாஜக சார்பில் 6 பேரும், காங்கிரஸ் சார்பில் 3 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இங்கு பாஜக மட்டும் 13 பிராமணர்களை வேட்பாளராக நிறுத்தி யிருந்தது குறிப்பிடத்தக்கது. மராத்தா பிரிவினரில் காங்கிரஸ் சார்பில் 4 பேரும், பாஜக சார்பில் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தமுறை கர்நாடக சட்டப்பேர வைக்கு 11 பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1962-ஆம் ஆண்டு 18 பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தனர். அதன்பிறகு தற்போது தான் அதிகபட்சமாக 11 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர் களில் பாஜக சார்பில் 5 பேரும், காங்கிரஸ் சார்பில் 4 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேச்சை சார்பில் தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.