states

img

தமிழ்நாட்டிற்கு எதிராக யாத்திரை நடத்தும் பாஜக

பெங்களூரு, செப்.16- காவிரி பிரச்சனை யில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள், ஒன்றிய அர சின் நீர்வளத்துறை அமைச்ச கஜேந்திரசிங் செகாவத்தை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், காவிரியில் தமிழ்நாட் டுக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து, காவிரி பாதுகாப்பு யாத்திரை நடத்தப்  போவதாக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை அறி வித்துள்ளார். கர்நாடகத்தில் காவிரி பாயும் மாவட்  டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களி லும் காவிரி பாதுகாப்பு யாத்திரையை நடத்  தப்படும் என கூறியிருக்கும் பசவராஜ் பொம்மை, கர்நாடகா முதல்வர் சித்த ராமையா தமிழ்நாட்டுக்கான முதல்வர் போல  செயல்படுகிறார்; தமிழ்நாட்டு நலன் கருதி காவிரி நீரை திறந்துவிடுகிறார். இது கன்னட  மக்களுக்கு செய்கிற துரோகம் என்று பசவராஜ் பொம்மை பாய்ந்துள்ளார்.