states

பாஜக தலைவர்களின் சுயநல பிரதேசவாத அரசியல்: வலுக்கும் மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்சனை!

பெங்களூரு, டிச.7- கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை, நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. எனி னும், பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் அரசியல் லாபத்திற்காக பிரதேச வாத அரசியலைத் தூண்டி விடு வதால், இரண்டு மாநிலங்களிலும் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடக மாநில எல்லையோ ரத்தில் பெலகாவி, பீதர், கார்வார்  ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மராத்தி  மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் மராத்திய மாநில பாரம்பரியத்தை யே கடைப்பிடித்து வருகின்றனர். எனினும், 1960-ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக் கப்பட்ட நிலையில் மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில  பகுதிகள் கர்நாடகா மாநில எல்லைக்  குள் சென்றுவிட்டதாக மகாராஷ் டிரா அரசு கூறி வருகிறது. கர்நாடக  எல்லைக்குள் உள்ள மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிரா வுடன் இணைக்க வேண்டும் என அங்குள்ள சில அமைப்புகள் நீண்ட காலமாக போராட்டமும் நடத்தி வரு கின்றனர்.  

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ் தலைமையிலான சிவ சேனா - பாஜக அரசாங்கம், “கர்நாடக எல்லையோரம் இருக்கும் சில கிரா மங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும்” என உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  இது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநி லத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த  வாரம் கல்லூரி ஒன்றில் நடந்த கலை  நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் கர்நாடகத்திற்கான கொடியை கட்டியபோது, அந்த மாணவர்கள் மீது மராட்டிய அமைப்பினர் தாக்கு தல் நடத்தினர். புனேவில் சிவசேனா  அமைப்பைச் சேர்ந்த சிலர் கர்நாடக மாநில பேருந்துகளில் கறுப்பு மற்றும்  காவி வண்ணங்களை தெளித்த தோடு அதில் ‘ஜெய் மகாராஷ்டிரா’  என்றும் எழுதினர். இது இருமாநி லங்களிலும் பதற்றத்தை ஏற்படுத்தி யது. 

இந்த விவகாரத்தில், பெலகா விக்கே நேரில் சென்று பிரச்சனை களை அறியப்போவதாக மகாராஷ் டிரா மாநில அமைச்சர்கள் சந்திர காந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் அறிவித்த நிலையில், அவர்கள் கர்நாடக எல்லைக்குள் நுழையக் கூடாது என்று இங்குள்ள கர்நாடக மாநில பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையே பகிரங்க மாக அறிவித்தார். 144 தடை உத்தர வும் பிறப்பித்தார்.  மகாராஷ்டிர அமைச்சர்கள், கர்நாடகத்திற்கு நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் மாநிலத் தலை வரான நாராயண கவுடா ஹீரோ போகேவாடி சுங்கச்சாவடி வழியாக  பெலகாவிக்குள் செல்ல முயன்றார்.  அப்போது அவரது ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியில் இருந்த பாதுகாப்  புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீ சாருடன் வார்த்தை மோதலில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது போராட்டத்  தில் ஈடுபட்டனர். அப்போது வன்  முறை வெடித்தது. அங்கு நின்று  கொண்டிருந்த லாரிகளில் இருந்த  மராத்தி மொழி வாசகங்கள் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டன. மேலும் அந்த லாரிகளின் சக்கரத்தில் இருந்து காற்று பிடுங்கி விடப்பட்டது. வாக னங்களின் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டன. அந்த  இடமே போர்க்களமானது. பதிலுக்கு, புனே யில் உத்தவ் தாக்கரே தலைமையி லான சிவசேனாவினர் கர்நாடக அரசுப் பேருந்துகளில் கறுப்பு மை பூசினர். இந்த பரபரப்பான சூழலில் மகாராஷ்டிர அமைச்சர்களின் பெலகாவி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிர துணைமுதல்வர் தேவேந்திர பட்னா விஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப் போது ‘ஹீரோபோகேவாடி’ தொடர்பாக பசவராஜ் பொம்மை யிடம் அவர் தனது அதிருப்தியை  தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளி யாகின. பசவராஜ் பொம்மையும், பெலகாவி சம்பவத்துக்கு காரண மானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்னாவிஸிடம் உறுதியளித்ததாக கூறப்பட்டது. ஆனால், “எல்லைப் பிரச்சனை யை உருவாக்கியதே மகாராஷ்டிரா தான்” என்று கர்நாடக முதல்வர் பசவ ராஜ் பொம்மையும், “மகாராஷ்டிர அமைச்சர்கள் பெங்களூருக்கு வரட்டும். எங்களால் தக்க பதிலடி  கொடுக்க முடியும். பெலகாவியை  யாரும் உரிமை கொண்டாட முடி யாது. அது கர்நாடகாவுக்குத்தான் சொந்தம்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக. ஞானேந்திராவும் பகிரங்கமாக கூறியுள்ளனர். மறுபுறத்தில், “எல்லைப் பிரச்சனை தொடர்பாக, ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு  காண வேண்டும். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என் றால், நாங்கள் பொறுமையை இழக்க வேண்டியிருக்கும்” என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ்  தலைவருமான சரத் பவார் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆத்திரமூட்டும் அறிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். “மகாராஷ்டிர வாகனங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் ஏற்படும் நிலைமைக்கு கர்நாடக அரசுதான் பொறுப்பு” என்றும் சரத்  பவார் குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்க ளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை மேலும் வலுக்கும் நிலை உருவாகியுள்ளது.