பெங்களூரு, ஜன. 10 - கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பா லத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாக வரா பகுதியில் செவ்வாயன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 4 பேர் மீது விழுந்தது. இதில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் - மனைவி, அவர்களது மகன், மகள் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி தாயும் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையும் உயிரிழந்தனர். தந்தை, மகள் ஆகி யோருக்கு மருத்துவமனையில் தொட ர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் உயிரிழந்தவர் பெயர் தேஜஸ்வனி என்பதும், அவரது கணவர் லோஹித் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய விபத்து நடந்த இடத்திற்கு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர்.
போலீசார் விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றி, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அத்துடன் இந்த விபத்து குறித்து தற்போது வழக்கும் பதிவு செய்தனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் விபத்துக்கு, அரசு கட்டுமானப் பணி களில் பாஜக அரசின் லஞ்ச - ஊழல் முறைகேடுகளே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கர்நாடகாவில், அரசுத் துறை களில் 40 சதவிகித கமிஷன் வாங்கிக் கொண்டே கட்டுமானம் சார்ந்த பணிகள் நடக்கின்றன என நீண்டகாலமாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. காண்டிராக்டர் ஒருவரின் தற்கொலை யைத் தொடர்ந்து, ஆளும் பாஜக-வைச் சேர்ந்த ஈஸ்வரப்பா பதவி விலகிய சம்பவமும் நடந்தது. அண்மையில், பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளி மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டை சுமத்திவிட்டு, கட்டுமானத்துறையைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபரும் தற்கொலை செய்து கொண்டார். அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பி யதற்காக, கட்டுமான பணிகளுக்கான சங்கத்தின் தலைவரை கர்நாடக பாஜக அரசு கைது செய்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில், கர்நாடக மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவகுமார், “40 சதவிகித கமிஷன் அரசின் விளைவுதான் இந்த விபத்து” என்று விமர்சித்துள்ளார்.