சண்டிகர், பிப். 21 - ஹரியானாவில் 2 இஸ்லாமிய இளைஞர்களை உயிரோடு எரித்துக் கொன்ற பஜ்ரங்தள் நிர்வாகியை விடு தலை செய்யக் கோரி, நூற்றுக் கணக்கானோர் ஊர்வலமாக சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவ தாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த ஜுனைத் மற்றும் நசீர் ஆகிய 2 இளைஞர்களை காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பஜ்ரங்தள் அமைப்பினர்தான் இவர்கள் இரு வரையும் கடத்தி சென்றுவிட்டதாக வும் அவர்கள் தெரிவித்துஇருந்தனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் பிவானியில் 2 உடல்களு டன் எரிந்த நிலையில் இருந்த காரை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், காரில் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிக்கப் பட்டுக் கிடந்த உடல்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பின ரால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட ஜுனைத் மற்றும் நசீர் என்பது தெரியவந்தது. ஜூனைத்தும், நசீரும் ராஜஸ்தான் மாநிலம் சிக்ரி-யில் உள்ள தங்களின் உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் ஹரியானா மாநில காவல்துறை மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினரால் தாக்கப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மானேஷ், டாக்சி ஓட்டுநர் ரிங்க சைனி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி யளித்து உள்ளது.
இந்நிலையில் பஜ்ரங் தள் நிர்வாகி மோனு மானேஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவாகவும் குர்ஹா னில் உள்ள மானேசரில் நூற்றுக்கணக் கானோர் ஊர்வலம் சென்றுள்ளனர். மோனுவை விடுதலை செய் என்ற முழக்கங்களை எழுப்பியபடியும், பதாகைகளை ஏந்தியபடியும் நடைபெற்ற இந்த ஊர்வலம் மிகமோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. கொலையாளி மோனு ராஜஸ்தானில் பசுப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வருவதாக வும், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மோனு, பசுவைக் கடத்திச் செல்பவர்களை பிடிப்பது, தாக்குவது போன்ற வன்முறை வீடியோக்களை அதில் வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த யூடியூப் சேனலை 2 லட்சத்துக்கு 5 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர். இதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யூடியூப், அவரை பாராட்டி சில்வர் பட்டன் விருதை வழங்கியும் உள்ளது. பாலிடெக்னிக் படித்திருக்கும் கொலையாளி மோனு, தன்னுடைய 2-ஆவது ஆண்டு கல்லூரி படிப்பின்போதே பஜ்ரங்தள் அமைப் பில் சேர்ந்து உள்ளார். துப்பாக்கி களுடன் அவர் காரில் சென்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.