states

img

பிரஜ்வல் ரேவண்ணா மீது 10,000 பக்க குற்றப்பத்திரிகை

பெங்களூரு, ஆக. 25 - பாஜக கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதாளத்தின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான குமாரசாமியின் அண்ணன் மகனு மான பிரஜ்வல் ரேவண்ணா (33) 300க்கும் மேற் பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை க்கு ள்ளாக்கிய  3000க்கும் வீடியோக்கள் கடந்த  ஏப்ரல் மாதம் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப் பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா  மீது 5 பிரிவுகளில் பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. வெளிநாட்டில் தலைமறை வாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா வை ஜூன் மாதம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, பெங்களூரு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை விசா ரித்துவரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 4 குற்றப்பத்திரிகைகளை பெங் களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஒவ்வொரு குற்றப்பத்திரி கையும் சுமார் 1,500 முதல் 2,500 பக்கங்கள் வரை உள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் எஞ்சியுள்ள‌ ஒரு வழக்கிலும் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு  போலீசார் தெரிவித்தனர். தற்போது பிர ஜ்வல் ரேவண்ணாக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை 10,000 பக்கங்களை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது.