states

என்எம்டிசி-க்கு மக்கள் தொடர்பு விருது

புதுதில்லி, ஏப்.23- தேசிய கனிமவள கழகம்  என்எம்டிசி, இந்திய மக்கள் தொடர்பு சொசை ட்டி வழங்கும்  2022-ம் ஆண்டுக்கான மக்கள் தொடர்பு விருதை தட்டிச் சென்றுள்ளது. நான்கு பிரிவுகளில் இது முதலி டத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானா மாநிலத் தின் மதுவிலக்கு , விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் வி சீனிவாஸ் கவுடு இந்த விருதை வழங்கினார். என்எம்டிசி-யின் பிரவீண் குமார், சீனிவாச ராவ் ஆகியோர் இதனைப் பொற்றுக்கொண்டனர். பெருநிறுவன வலை தளம், சிறப்பான ஆண்டு அறிக்கை, நியூஸ் லெட்டர் வடிவமைப்பு, சிஎஸ்ஆர் கார்பரேட் வீடியோ ஆகிய வற்றுக்காக தேசிய கனிம வள கழகம் இந்த விருதைப் பெற்றுள்ளது.