இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பு உள்ளிட்ட எதேச்சதிகார நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 17,914 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,952 குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பு உள்ளிட்ட எதேச்சதிகார நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 17,914 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,952 குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.