states

img

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை  தேவேந்திர யாதவ், ரமேஷ் மஹ்தோ, ஜே.கே. யாதவ் ஆகிய 3 பேரும் ஒரே இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இரவில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் கோபால்கஞ்சில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும்  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தனர்.
மேலும் 6 பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
உயிரிழந்தவர்களின்  உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே மார்ச் 9 அன்று கள்ளச்சாராயம் அருந்தியதால், சிவானில் 3 பேரும், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 2 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;