states

img

புதுவை மின்துறை தனியார்மயம்: வலுக்கும் எதிர்ப்பு

புதுச்சேரி, ஜூன் 8- புதுச்சேரி மின்துறையை தனி யார் மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி அதிகாரிகள் ஊழியர்கள் தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியும் கைவிட வலியுறுத்தி சிபிஎம், காங்கிரஸ், திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள், அரசு ஊழியர் சம்மேளனம், மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி மின்துறை பொறியாளர்கள், அதி காரிகள், ஊழியர்கள் உள்ளடக்கிய போராட்டக் குழுவினர் புதன்கிழமை முதல் (ஜூன் 8) தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை துவக்கி யுள்ளனர். புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு துவங்கிய போராட்டத்திற்கு தலை வர் சி.அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வேல்முருகன், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராம சாமி, இளங்கோவன், சாந்து ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.