states

img

காவல்துறையை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மே 18- புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த வர் வெங்கடாசலபதி. இவரது மனைவி லாவண்யா. கணவர் வெங்கடாசலபதி தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட லாவண்யா அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் உதவியுடன் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையி னர் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், குற்றவாளிக்கு ஆதரவாக காலதாமதம் செய்து வந்துள்ளனர். காவல்துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சாங்கம் சார்பில் காவல்  நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் வில்லியனூர் கொம்யூன் தலைவர் சிவசங்கரி தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், பிரதேச தலைவர் இளவரசி, செயலாளர் சத்தியா, நிர்வாகிகள் புவனேஸ்வரி, பூமாதேவி, அமிர்தவல்லி, உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;