புதுச்சேரி, அக். 1- சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (அக்.2) புதுச்சேரியில் மனிதசங்கிலி இயக்கம் நடைபெறுகிறது. மதச்சார்பற்ற கட்சி களின் தலைவர்கள் ஆலோ சனைக்கூட்டம் முதலியார் பேட்டையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (அக். 1) நடை பெற்றது. சிபிஐ மாநிலச் செய லாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். இதில் திமுக சட்ட மன்ற உறுப்பினர் சம்பத், காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்திய நாதன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், விசிக மாநிலச் செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக மாநிலத் தலைவர் கபிரியேல், சிபிஎம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் பால சுப்ரபிமணியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் உமர்பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்தி பிறந்த நாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மாபெரும் மனிதசங்கிலி இயக்கம் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) புதுச்சேரி அண்ணா சாலையில் நடைபெறுகிறது. மேலும், மின்துறையை விற்கும் தனியார் மய மாக்கும் அரசானையை ரத்து செய்யும் வரை மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு ள்ளோம். இவ்வாறு கூறினர்.