states

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து புதுவை மக்களை பாதுகாத்திடுக சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி,நவ.5- பருவமழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பாகூர் கொம்யூன் நிர்வாகம் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் வெள்ளம் புயலால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதி யாக பாகூர் உள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வசதிகள் மிகச் சிறப்பாக இருந்த பாகூர் கொம்யூன் பகுதி சமீப காலமாக முறை யாக தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப் புகளாலும் சிறிய மழைக்கே வெள்ள நீர் வெளியேறாமல் பாதிக்கப்படும் அவல நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதி களில் வடிகால்களை காலத்தோடு தூர்வா மல் கடந்த காலங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும் பருவமழை துவங்கிய நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு பின்பே வடி கால் வாய்க்கால்கள் தற்போது தூர்வாரப் பட்டு வருகிறது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர்வார வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் ப.சரவணன், மாநிலக் குழு உறுப்பினர் கலியன், கொம்யூன்குழு உறுப்பினர்கள் அரிதாஸ், சேகர் மற்றும்  சிற்றரசு ஆகியோர் கொம்யூன் பஞ்சாய்த்து ஆணையர் மற்றும் தாசில்தார், பொதுப் பணித்துறை அதிகாரிகளை தனிதனியாக நேரில் சந்தித்து பருவமழையில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு கொண்டனர். மேலும் மக்களை பாதுக்காக்க தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளை நீரை வெளியேற்றுவது, மக்களை மீட்பது, பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கான இருப்பிடங்களை உறுதிசெய்ய வேண்டும். உணவு, குடிநீர், மின்சார வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கவேண்டும். மேலும் உடனடியாக அனைத்து அதிகாரி கள், அரசியல் கட்சிகளை கொண்ட கூட்ட த்தை கூட்டி பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.