புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகத்தில் பணிபுரிந்து வரும் 9 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் பணிபுரிந்து வரும் 4 உதவியாளர்கள் என மொத்தம் 13 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பார் பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சர் ெஜயக்குமார், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மேலாண் இயக்குனர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.