states

பீகார் முதல்வரை விட அதிக சொத்துக்கள் கொண்ட மகன்

பாட்னா, ஜன.2- ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளிலும், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை பீகாரில் நிதிஷ்குமார் அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி, முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பீகார் மாநில அரசு வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ரூ.75.36 லட்சம் அசையும், அசையா சொத்துகள் இருக்கின்றன. ஆனால் அவரது மகனான நிஷாந்த்குமாருக்கு ஐந்து மடங்கு அதிகமான சொத்துகள் உள்ளன. அதாவது நிஷாந்த்குமாருக்கு ரூ.1.63 கோடி அசையும் சொத்தும், ரூ.1.98 கோடி அசையா சொத்தும் உள்ளன.