states

img

2025 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியில் இருந்து கொண்டே எதிர்ப்பு நாடகம் பீகார் மக்களை ஏமாற்றும் ஜேடியு, எல்ஜேபி, எச்ஏஎம்

பாட்னா பீகார் மாநிலத்தின் பிராந்தியக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சி கள், மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பாஜகவின் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. பீகார் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் பாஜகவுடன், ஐக்கிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், நிதிஷ் குமார் முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வராகவும் உள்ள னர். மேலும் லோக் ஜனசக்தி, ஹிந்து ஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் அமைச்சர் மற்றும் துறைத் தலைவர் பதவிகளை பெற்று  பீகார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கின்றன. 

அதே போல 18ஆவது மக்க ளவை தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜகவிற்கு ஆட்சி அமைக்க  ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆதரவு அளித் துள்ளன. இந்த 3 கட்சிகளின் 50% தயவால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில், இதற்கு கைமாறாக லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கு ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியும், ஜிதன்ராம் மஞ்சிக்கு ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளது பாஜக.

மாநிலத்திலும் சரி, தேசிய அரசி யலிலும் சரி பாஜகவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ள சூழலில், வர விருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திடீரென தங்க ளை பாஜகவின் எதிர்ப்பாளர் போல பீகார் மக்களிடம் இரட்டை வேடத்தை வெளிப்படுத்திக் கொள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய 3 கட்சிக ளும் முயன்று வருகின்றன. அதா வது பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே மோடி அரசு அறிவிக்கும் மசோதா மற்றும் சட்டதிருத்தங்க ளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பது போன்று, நாங்கள் பாஜகவிற்கு எதிரானவர்கள் போன்றும் பீகார் மக்களிடம் நாடகத்தை துவங்கியுள்ளனர்.

வெளிப்பட்டது  இரட்டை வேடம்

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோ தாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொழுது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முதலில் ஆதரவு தெரிவித்தது. அக்கட்சியின் எம்.பி., ராஜீவ் ரஞ்சன் மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசினார். அதே போல சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி ஆகிய இரு வரும் நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய மசோதாவை பற்றி வாய் திறக்காமல் உறக்க நிலையில் இருந்தது போல அமைதியாக இருந்தனர். 

ஆனால் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்த எதிர்ப்பால் பின் வாங்கிய மோடி அரசு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா வை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தற்போது பாஜக எம்.பி., ஜெக தாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகின்றது. 

நாடாளுமன்ற கூட்டுக்குழு விற்கு சென்ற பின் முதலில் ஆதரவு அளித்த ஐக்கிய ஜனதாதளம் திடீரென வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்தது. பீகார் மாநில சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் மொகத் ஜமா கான் எதிர்ப்பு தெரி வித்ததாகவும், இதனால் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கடுமை யாக எதிர்க்கிறோம் என ஐக்கிய  ஜனதாதள தலைவரும் பீகார் முதல் வருமான நிதிஷ் குமார் கூறினார். அதாவது நாடாளுமன்றத்தில் வக்பு  வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அமை தியாக இருந்துவிட்டு கூட்டுக்குழு வுக்குச் சென்ற பின் மசோதாவிற்கு எதிராக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருக்கிறார் “பல்டி” நிதிஷ் குமார். 

ஐக்கிய ஜனதாதளம் போல வக்பு வாரிய சட்டத்திருத்தம், யுபி எஸ்சி நேரடி நியமனம் தொடர்பான மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் நேர டியாக எதிர்ப்பு தெரிவித்தன. யுபிஎஸ்சி நேரடி நியமனம் தொ டர்பாக ஒன்றிய அமைச்சர் சிராக்  பஸ்வான்,”யுபிஎஸ்சி நேரடி நிய மனங்களில் எனது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருக்கி றது. எந்தவொரு அரசுப் பணி நியம னமாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இது முற்றிலும் தவறா னது. எனவே, நாங்கள் இதற்கு முற்றிலுமாக ஆதரவாக இல்லை என்பதை எனது லோக் ஜனசக்தி கட்சி சார்பில் வெளிப்படுத்து வேன்” எனக் கூறினார். ஐக்கிய ஜன தாதளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளும் யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளி யிட்டன.

பீகார் அரசுக்கும்  எச்சரிக்கை நாடகம்

சிராக் பஸ்வானைப் போல பீகார் மாநிலத்தில் முக்கிய தலித் தலைவராக கருதப்படுகிறார் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி. முன்னாள் முதல்வரான இவர் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பற்றி பெரியளவில் பேச வில்லை என்றாலும், அவர் ஒருபடி மேலே சென்று தலித் மக்களுக்கு ஆதரவாக பீகார் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர் போல எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தத் தவறினால் தெரு வில் இறங்கி போராட்டம் நடத்து வோம் என பீகார் பாஜக கூட்டணி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார். 

அடுத்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்  நடைபெறுகிறது. இந்த தேர்தலுக் காக பாஜக எதிர்ப்பாளர் போன்றும், நாங்கள் தலித் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன் காப்பவர்கள் என்றும் வெளிக்காட்டிக் கொள் ளவே நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியோர் இரட்டை வேட நாடகம் ஆடி வருகின்றனர். இந்த நாடகத்திற்கு அனுமதி அளித்தது போல மோடி அரசும், பாஜகவும் அமைதியாக இருப்பது சினிமா திரைக்கதையை விட மிஞ்சியுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.