states

img

எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி  

பீகாரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.  

பீகார் மாநிலம் லகிசாரி மாவட்டம் பிபரா கிராமம் அருகே உள்ள சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுபுறத்தில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;