பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இந்த உணவை உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் ஃபோர்ப்ஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், அவர்கள் இன்று இரவுக்குள் வீடு திரும்புவார்கள் என்று ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.