states

img

பீகார்: பள்ளி மதிய உணவில் கிடந்த பாம்பு- 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இந்த உணவை உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் ஃபோர்ப்ஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், அவர்கள் இன்று இரவுக்குள் வீடு திரும்புவார்கள் என்று ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.