states

img

பீகார்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முதியவர் அடித்து கொலை

பீகாரில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசு பாதுகாப்பு என்கின்ற பெயரில் வடமாநிலங்களில் சங்-பரிவாரத்தினர் மாட்டு இறைச்சி வைத்திருப்போரை அடிப்பதும், கொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதால் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சங்-பரிவாரத்தினரின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்த நசீம் குரேஷி(55) தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அப்போது இவர்களை வழிமறித்த ஒரு கும்பல் நீங்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்து, உருட்டுக் கட்டையை எடுத்து நசீம் குரேஷி மற்றும் உடன் வந்த பேரோஷ் குரேஷியை கடுமையாக தாக்கியுள்ளது.அப்போது பேரோஷ் குரேஷி மட்டும் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

ரத்தவெள்ளத்திலிருந்த முதியவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரைத் தாக்கிய சஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.