ஐஜத கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில முதல்வரும், ஐஜத கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐஜத கட்சி இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இச்சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.