states

img

பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதாக கூறி போலி வீடியோக்களை வெளியிட்ட பாஜக எம்எல்ஏக்கள்!

பாட்னா, மார்ச் 4- தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்  கப்படுவதாக போலி வீடியோக்களை வெளி யிட்ட பாஜகவினர், இதுதொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தும் இருமாநில மக்களை மோதவிடும் கலவர முயற்சியை அரங்கேற்றியுள்ளனர். பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக் கிய ‘மகா கூட்டணி’ ஆட்சி நடைபெற்று வரு கிறது. நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிலையில், திடீரென பாஜக-வை தனித்து விட்டார்.  அதிகாரத்தில் இருந்த பாஜக திடீரென எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. இத னால், விரக்தியில் இருக்கும் பாஜக, மகா  கூட்டணி அரசுக்கு எதிராக எதையாவது ஒரு  பிரச்சனையைக் கிளப்பி விட்டுக் கொண்டே  இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லாவிட்டா லும், பாஜகவே பொய்யையும், புரளிகளை யும் அள்ளிவிட்டு, புதிது புதிதாக பிரச்சனை களை உருவாக்கி வருகிறது.

அந்த வகையில்தான், தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில்  பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தை யும் திரட்டுவதையும், அதில், ராஷ்ட்டிரிய ஜனதாதளம் தலைவரும் பீகார் துணைமுதல்வ ருமான தேஜஸ்வி கலந்து கொள்கிறார் என்ப தையும் அறிந்து, அதற்கு எதிராக சதிவேலை யில் இறங்கியது.  தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக் கப்படுகின்றனர் என்றும், ‘மகா கூட்டணி’ அரசு  அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் போலியான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரவ விட்டது. பீகார் மக்களும் இந்த வீடியோக்களை நம்பி, தங்க ளின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் சமூக வலைதளங்களில பதிவிட ஆரம்பித்தனர். இது  பீகாரில் தீப்பற்றும் விஷயமாக பாஜக-வால் மாற்றப்பட்டது. “தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மாநி லத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்கு தல் நடத்தப்பட்டதாக செய்தித்தாள்கள் மூலம்  அறிந்து கொண்டேன். இதுதொடர்பாக தமிழ்  நாடு அரசு அதிகாரிகளுடன் பேசி, தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலர் மற்றும் காவல் துறைக்கு  உத்தரவிட்டுள்ளேன்” என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரே டுவிட்டரில் பதிவிடும் அளவிற்கு பாஜக தனது புரட்டு வேலையை கச்சிதமாக அரங்கேற்றியது. ஆனால், தமிழகத்தில் வடமாநிலத்தினர் தாக்கப்படுவதாக பாஜகவினர் பரப்பிய அந்த  போலி வீடியோக்கள் ஒன்றுகூட தமிழகத்தில் நடந்த சம்பவம் அல்ல என்பதை, இணைதள  செய்தி சரிபார்ப்பு அமைப்பான ‘ஆல்ட் நியூஸ்’  இணை நிறுவனர் முகம்மது ஜூபைர் உள் ளிட்டோர் அம்பலப்படுத்தினர்.

“மொத்தமுள்ள 3 வீடியோக்களில் முதல்  வீடியோ, ஹைதராபாத்தில் நடந்த சம்பவம். இதில் தாக்குதலுக்கு உள்ளானவர் ஜன்கம் சாய்நாத் என்ற இளைஞர் ஆவார். அவரைத்  தாக்கியது தொடர்பாக 3 பேரை தெலுங்கானா  அரசு கைதும் செய்துள்ளது. இரண்டாவது வீடியோ, கர்நாடகத்தில் நடந்த சம்பவம் ஆகும்.  இங்கு 2021-ஆம் ஆண்டு அன்வர் ஷேக் என்ற  பீகார் இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக  கர்நாடக அரசு 4 பேரைக் கைது செய்துள்ளது. மூன்றாவது வீடியோவில் இடம்பெற்றிருப்பது ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சம்பவம்  ஆகும். அந்த சம்பவத்தில் ஒரு வழக்கறிஞரை  சில இளைஞர்கள் குத்திக் கொலை செய்கின்ற னர். இந்த வீடியோக்களுக்கும், தமிழ்நாடு மற்றும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை. மாறாக, இந்த வீடியோக்களைத்தான், தமிழ் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களாகக் காட்டி,  “பீகாரை சேர்ந்தவர்களை தமிழர்கள் தாக்குகி றார்கள்” என்ற தலைப்பிட்டு பாஜகவினர் பரப்பு கின்றனர் என்று அம்பலப்படுத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வியா ழக்கிழமையன்றே தமிழக காவல்துறை டிஜிபி  சைலேந்திர பாபுவும், வீடியோ வழியே விளக்  கம் கொடுத்திருந்தார். அதில், “தீங்கு விளை விக்கும் நோக்கில் திட்டமிட்டு பகிரப்பட்ட போலியான வீடியோக்கள் அவை” என்று தெரிவித்திருந்தார்.

எனினும், பாஜகவினர் விடுவதாக இல்லை. வெள்ளிக்கிழமையன்று மதிய உணவு இடை வேளைக்கு முன், பீகார் சட்டப்பேரவையில் 2023 – 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட் தொடர்  பாக நடைபெறவிருந்த விவாதத்தை ஒத்தி வைக்கக் கோரிய பாஜக தலைவர் விஜய் குமார் சின்ஹா, பீகாரில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதி களுக்கு இளைஞர்கள் வேலையில் ஈடுபடு வது பற்றி விவாதிக்க வேண்டும் என்று நோட்  டீஸ் அளித்தார். மேலும் இந்த விவகாரத்தை விவாதித்தே ஆக வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் மற்றும் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் அமர்ந்திருக்கும் பெஞ்ச் களின் முன்பு திரண்டு பாஜக எம்எல்-ஏ-க்கள் கூச்சலிட்டனர். அப்போது பேசிய பீகார் அமைச்சர் விஜய்  குமார் சவுத்ரி, “அந்த மாநில முதல்வரின் தனிப்  பட்ட அழைப்பின் பேரில் எங்கள் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழகம் சென்றதுதான் பாஜகவினருக்கு பிரச்சனை. ஒருவேளை புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைச் செய்திகள் உண்மையாக இருந்தாலும், இரு மாநில அதிகாரிகளும் உயரதிகாரிகளும் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.  “தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி பீகாரில் இருக்கும் சிலர் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். தாக்குதல் தொடர்பான வீடி யோக்கள் முற்றிலும் பொய்யான ஒன்று. இந்த  விவகாரத்தில் இரண்டு வீடியோக்களை பரப்பு கின்றனர். இரண்டுமே பொய்யான வீடி யோக்கள்.. 100 சதவிகிதம் பொய். புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களுக்குப் பாது காப்பு இல்லை என்று பொய்யான கட்ட மைப்பை உருவாக்கவே இவ்வாறு செய்கின்ற னர். போலியான வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை. அவர்கள் எதற்காக இப்படி தொடர்ச்சியாக பொய்யான தகவல் களைப் பரப்ப வேண்டும். இதுபோன்ற தாக்கு தல் சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் கூட எங்கள் (பீகார்) அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று துணை முதல்வர் தேஜஸ்வி-யும் பாஜக தலைவர்களுக்கு பதிலளித்தார். 

இவை எவற்றையும் கேட்காமல் பாஜக வினர் கூச்சலிடவே, பாஜகவின் இந்த செய லைக் கண்டித்த சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி, பாஜக அரசியல் லாபம் பார்க்க முயற்  சிப்பதாகக் கூறினார்.  ஆனாலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்று கூச்சலிட்ட பாஜகவினர்,  தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்  படுவது தொடர்பாக நேரில் ஆராய பீகார் சட்ட மன்றக் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சட்டமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். இதனிடையே, பீகார் ஏடிஜிபி ஜே.எஸ். கங்வார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  “தனிப்பட்ட சம்பவத்தில் படம் பிடிக்கப்பட்ட  வீடியோவை, தற்போது சமூக வலைதளத்தில் பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப் பட்டுள்ளதாக திரித்து பகிரப்பட்டுள்ளதாக தெரி கிறது. தமிழ்நாடு போலீசார், தொழிலாளர் களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வரு வதாக தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சம்ப வம் அங்கு நடக்கவில்லை என்றும் அவர்கள் தரப்பில் உறுதியாக தெரிவித்துள்ளனர். தொழி லாளர்கள் அனைவரும் அங்கு பாதுகாப்பாக உள்ளனர். எந்த பிரச்சனையும் அங்கு இல்லை.  சம்பந்தப்பட்டவர்கள் உடன் தொடர்ந்து பீகார்  மாநில போலீசார் பேசி வருகின்றனர். அங்கு  இதுபோன்ற தாக்குதல் சம்பவம் எதுவும் நடந்த தாக எங்கள் கவனத்திற்கு இதுவரை வர வில்லை. நாங்களும் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். மேலும், பீகார் டிஜிபி,  தமிழக டிஜிபியுடன் பேசியுள்ளார். அதேபோல இதர போலீஸ் உயர் அதிகாரிகளும், தமிழக  போலீஸ் அதிகாரிகளுடன் பேசி வருகின்ற னர்” என தெரிவித்துள்ளார்.