states

img

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு - ராணுவ வீரர் கைது

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சக ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவர் சக வீரர்களை தனிப்பட்ட விரோதம் காரணமாக சுட்டு கொன்றார் என்று பதிண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா தெரிவித்தார். இதுத் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.