குறைந்தபட்ச வயதுத் தேவையை பூர்த்தி செய் யத் தவறியதற்காக நாட் டின் பிரபல செய்தி நிறு வனமான ஏஎன்ஐயின் (ANI) கணக்கை முடக்கி யது டுவிட்டர் நிறுவனம். டுவிட்டர் கணக்கை உரு வாக்க குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும் என்ற நிலையில், இந்த வயது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற் காக கணக்கு முடக்கப்பட் டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பிரேசில் நீதிமன்றம் கூறி யது போல பள்ளிகள் தாக் குதல் தொடர்பான தனிப் பட்ட தரவைப் பெற தொழில்நுட்ப ரீதியாக எவ்வித சாத்தியமான கூறுகள் கிடையாது என டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் விளக்கம் அளித் துள்ளார். பிரேசிலில் பள்ளிகளை குறிவைத்து மாணவர்கள் இடையே மோதலை தூண்டும் வகையில் வன்முறை கருத்துக்களை பரப்பிய நியோ - நாஜி குழுக்கள் தொடர்பாக டெலிகிராம் வலைதளம் எந்த தக வல்களையும் காவல் துறைக்கு வழங்க வில்லை எனக் கூறி டெலி கிராமுக்கு நாடுமுழுவ தும் தடை விதித்து உத்த ரவிட்டது பிரேசில் நீதி மன்றம்.
உலகச் செய்திகள்
ஊதியம் மற்றும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடுப் பிரச்ச னையை மையப்படுத்தி பிரிட்டனின் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்ச னைக்காக நான்காவது முறையாக அவர்கள் இத்தகைய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஆசிரியர்கள் சங்கம், “இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒற்றுமையைத் தற்போது பார்க்க முடிகிறது. அவமானப்படுத்தும் வகையிலான ஊதிய உயர்வுதான் இந்த ஒற்றுமையைக் கட்டியுள்ளது” என்று கூறியுள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ரஷ்யாவின் எரிபொருள் விநியோகம் குறைந்துவிட்டதால், அந்தத் தேவையை நிறைவேற்றும் பணியை ஈரான் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் துவங்கி விட்டன என்று ஈரானின் அரசு எண்ணெய் நிறுவனமான நியோக்கின் முன்னாள் துணைத்தலைவர் மோஹ்சென் சம்சாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஒருபோதும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் உறுதியளித்திருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “நடை முறை சாத்தியமான, சரிசமமான மற்றும் இருதரப்புக்கும் பலன ளிக்கக்கூடிய உறவுகளை நட்பு நாடுகளுடன் ரஷ்யா ஏற்படுத்திக் கொள்ளும். யூரேசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இத்தகைய அணுகுமுறையையே தற்போது மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.