தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30 அன்று சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாரத் ராஷ் டிரிய சமிதி, காங்கி ரஸ், பாஜக மற்றும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா (ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் சகோதரி சர்மிளா) என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்நிலை யில், முன்னாள் எம்.பியும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான விவேக் வெங்கட்சாமி தனது மகனுக்கு சீட் மறுத்ததால் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். ராஜினாமா செய்துள்ள விவேக் வெங்கட்சாமிக்கும் அவரது மகனுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.