தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் பாஜகவில் இனைய வேண்டும் என்று கூறி ரூ.100 கோடி பேரம் பேசிய 3 பேரை தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரகசிய பேரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.15 கோடி பிடிபட்டதாக தெலுங்கானா போலீசார் தகவல்.