states

img

தெலுங்கானா: மின்சார வாகன சார்ஜிங் பிரிவில் தீ விபத்து - 8 பேர் பலி

தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார வாகன சார்ஜிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார இரு சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்து கொள்ளும் சார்ஜிங் பிரிவு ஒன்று அமைந்துள்ளது. அந்த பிரிவில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேற்தளத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், மின்சார இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;