தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கிய தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புதன்கிழமை மாலை முதல் செகந்திராபாத்-விஜயவாடா வழித்தடத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.