ஹைதராபாத் கடந்த ஆகஸ்ட் 31 அன்று தெலுங்கானாவில் உள்ள ஆசிபாபாத் மாவட்டத்தின் ஜெய்னூர் நகரிலிருந்து பழங்குடி யின பெண் ஒருவர் (45 வயது) சிர்பூரில் உள்ள தனது தாய் வீட்டு க்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. செப்டம் பர் 1 அன்று ஆசிபாபாத் பைபாஸ் அருகே சுயநினைவின்றி பெண் ஒருவர் காயங்களுடன் மீட்கப் பட்டார். காணாமல் போனதாக கூறப்படும் பழங்குடியின பெண் தான் இவர் என தகவல் வெளி யாகிய நிலையில், ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போ லீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கினர்.
ஆனால் பெண் சுயநினைவு திரும்பிய பின் போலீசாரிடம், “சாலையில் நான் சென்று கொண்டு இருந்த பொழுது ஆட்டோ ஓட்டுநர் ஷேக் மஸ்த் கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்ததாகவும், நான் சுயநினைவை இழந்ததால், உயிரி ழந்ததாக கருதி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே என்னை தூக்கி எறிந்து விட்டுச் சென்றார்” எனவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பெண்ணின் சகோ தரர் அளித்த புகாரின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மேல்சிகிச்சைக்காக ஹைத ராபாத் நகர அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் வீடு தீக்கிரை
பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ஜெய்னூரில் ஆதிவாசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆயிரக்கணக்கான பழங்குடி யினர் திரண்டு குற்றவாளியை தூக்கிலிட வலியுறுத்தி ஜெய்னூ ரில் செவ்வாய் மற்றும் புதனன்று தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் விப ரம் போராட்டக் களத்தில் இருந்த வர்களுக்கு தெரிய வந்ததாகவும் ஆட்டோ ஓட்டுநர் ஷேக் மஸ்த்தின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியா கியது. மேலும் அங்கே இருந்த மசூ தியும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனால் பழங்குடியின மக்கள் - முஸ்லிம் மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு பிரிவினரும் ஜெய்னூர் சாலையில் இருந்த கடைகளில் நுழைந்து அங்கே இருந்த பொருட்களை அடித்து உடைத்து, சாலையில் கொண்டு வந்து பொருட்களுக்கு தீ வைத்துக் கொளுத்தினர்.
விஷயம் அறிந்த தெலுங்கானா அரசு சிறப்பு அதிரடி படையை அனுப்பி தடியடி நடத்தி வன் முறையை கட்டுக்குள் கொண்டு வந்தது. டிஜிபி ஜிதேந்தர், கூடுதல் டிஜிபி மகேஷ் பகவத் ஆகியோர் ஜெய்னூரில் நிலைமையை தொ டர்ந்து கண்காணித்து வருகின்ற னர். முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக, மாவட்ட நிர்வாகம் ஜெய்னூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் ஜெய்னூரில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் நீதி வழங்கப்படும் என தெலுங்கா னா அமைச்சர் சீதக்கா உறுதி அளித்துள்ளார்.