தெலுங்கானாவில் 100 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம் திகுல் கிராமத்தில் மார்ச் 27 ஆம் தேதி அன்று 100 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டதாக விலங்குகள் உரிமை ஆர்வலர் அதுலாபுரம் கவுதம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இறந்த நாய்களின் உடல்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி போலீசிடம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த விலங்குகள் உரிமை ஆர்வலர் அதுலாபுரம் கவுதம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதனைதொடர்ந்து கடந்த 3 மாதங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.