“சிந்து நதி நீரை நிறுத்திவிட்டு எங்கே தேக்கி வைப்பீர்கள்?”
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் ஒன்றிய அரசு பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் சிந்து நதிநீர் பாயும் இடத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என விமர்ச னங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்.பி.,”சிந்து நதி நீரை நிறுத்துவது என்பது மிகச் சிறந்த முடிவுதான். ஆனால் அந்த நீரை எல்லாம் எங்கே தேக்கி வைப்பீர்கள்? ஒன்றிய அரசு இது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் அதனை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், இது ஒன்றும் அரசியல் விவகாரம் இல்லை யே. இந்தியாவில் பயங்கரவாத நட வடிக்கைளை மேற்கொள்ளும் பயங்கர வாதிகளுக்கு இருப்பிடம் அளிக்கும் நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தா னுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வ தேச சட்டங்களும் அனுமதி வழங்குகின் றன. எல்லாம் சரிதான். ஆனால், தாக்கு தல் நடந்த பைசரன் (பஹல்ஹாம்) பள்ளத்தாக்கில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படாதது ஏன்? பெயரையும் மதத்தையும் கேட்டு பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொண்டிருக்கும் போது, அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது ஏன்? காஷ்மீர் மக்கள் பற்றியும், காஷ்மீர் மாணவர்கள் பற்றியும் தவறான அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என கூறினார்.