states

img

மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் 10ஆவது நாளிலும் வாக்குமூலம் பெறவில்லை

புதுதில்லி, மே 3- மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் மீதான பாலி யல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துரோணாச்சார்யா விருது வென்றவரும் முன்னாள் கிரேக்க-ரோமன் தேசிய பயிற்சியாளருமான மஹாபீர் பிஷ்னோய், போராட்டம் நடத்தும் வீரர்களை அச்சுறுத்து கிறார். ஹரியானா மல்யுத்த சம்மேளன செயலாளர் ராகேஷ் சிங்கும் இதே நடவடிக்கையை மேற்கொள்கிறார் என்று  பஜ்ரங் புனியா செவ்வாயன்று ஊடகங்களிடம்தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று புகார்தாரரின் பெற்றோரிடம் புகாரை திரும்பப் பெறுமாறு வற்புறுத்துகிறார்கள். சிறுமிக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு காவல்துறையும், அரசும் தான் பொறுப்பு. பிரிஜ்பூஷன் தனது பயிற்சியாளரை மிரட்டியதையும் பஜ்ரங் வெளிப்படுத்தினார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு பிஷ்னோய் தன்னை மிரட்டியதை வினேஷ் போகத் உறுதிப்படுத்தினார். எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் போராட்ட இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனிடையே, பாஜக எம்.பி.யான பிரிஜ்பூஷன் மீது புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும், புகார் அளித்தவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய தில்லி காவல்துறை முன்வரவில்லை. நான்கு நாட்களுக்கு முன், போக்சோ உள்ளிட்ட கடுமை யான குற்றச்சாட்டு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஆனால், விசாரணை நடத்து வதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. போலீசார் வேண்டுமென்றே நட வடிக்கையை தாமதப்படுத்துவதாக வீரர்கள் குற்றம்சாட்டி னர். கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விளையாட்டு நட்சத்திரங்கள் அறிவித்துள்ளனர். இந்நிலை யில், சந்தேக நபரை எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் தில்லி காவல்துறை வழங்கிய பாதுகாப்புப் படையினரின் சேவையை மறுத்தனர். பஜ்ரங்கிற்கு இரண்டு ஆயுதம் தாங்கிய போலீசாரையும், வினேஷ் மற்றும் சாக்ஷிக்கு தலா  ஒரு போலீசாரையும் வழங்குமாறு கன்னாட் பிளேஸ் ஏசிபிக்கு அறிவுறுத்தப்பட்டது. சிறுமியான வீராங்கனைக்கு பாது காப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஜந்தர் மந்திரில் பாதுகாப்பாக இல்லை

என்றால், வேறு எங்கு  பாதுகாப்பாக இருப்பார்கள் என்று புனியா கேட்டார். பறிபோகும் கிர்கிஸ்தான் போட்டி பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெறவுள்ள தரவரிசை தொடர் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை அல்லது விளையாட்டு அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மூவரும் இதற்கு முன்பு ஜாக்ரெப் மற்றும் கெய்ரோ போட்டிகளில் தோல்வியடைந்தனர். இது மற்றொரு ஷாஹீன்பாக் போராட்டம் என்று பிரிஜ்பூஷன் குற்றம் சாட்டினார். ஷாஹீன் பாக் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட துக்டே-துக்டே கும்பல்  இங்கு இருப்பதாகவும் பாஜக எம்.பி. கூறினார். போராட்டக் காரர்களின் இலக்கு பாஜகவும் மோடியும்தான். மோடி, அமித் ஷா அல்லது ஜேபி நட்டா கூறினால் பதவி விலகலாம். இது பணம் பெற்றுக்கொண்டு நடத்தும் போராட்டம்  என்று பிரிஜ்பூஷன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.