states

மருத்துவமனையில் லஞ்சம் புடவையை மறைத்து சாலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண்கள்

அலிகார், மே 21- அலிகார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க லஞ்சம் கேட்ட  நிலையில், சாலையில் கர்ப்பிணிக்கு பிரசவம்  பார்க்கும் அவலநிலை ஏற்பட்டது.  பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் அலிகார் மாவட்டத்தின் இக்லாஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பப்லு சிங் (30). இவரது மனைவி சுமன் தேவி (25). நிறைமாத கர்ப்பிணியான சுமன் தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனு மதித்தனர். அங்கிருந்த மருத்துவப் பணியா ளர்கள் பிரசவம் பார்ப்பதற்காக ரூ.1000 லஞ்  சம் கேட்டனர். பணம் இல்லாததால் மருத்துவமனை யில் இருந்து தனது மனைவியை வெளியே அழைத்து வந்த பப்லு சிங், வேறொரு அரசு  மருத்துவமனைக்கு செல்ல முயன்றார். ஆனால் நடந்து செல்லும் வழியில் சுமன் தேவிக்கு பிரசவ வலி கடுமையானது. அத னால் அவ்வழியாக சென்றவர்கள் உட்பட பல  பெண்கள் சுமன் தேவியின் பிரசவத்திற்கு உதவினர். அதற்காக அவர்கள் புடவை யால் சுமன் தேவியை சுற்றிலும் மறைப்பு அமைத்து பிரசவம் பார்த்தனர். சுமன் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  இதுகுறித்து இக்லாஸ் சுகாதார மைய பொறுப்பாளர் ரோஹித் பாட்டி கூறுகையில், ‘‘சுமன் தேவியின் கணவரிடம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. செவி லியர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. பிரசவித்த பெண் அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்” என்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.