தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி, ஏப்.22- கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியின் போது ஷாஹீன் பாக் மற்றும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா. தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒருபடி மேலே சென்று “கோலி மாரோ தேஷ் கே கடாரோ” (“துரோகிகளை சுடுங்கள்”) என்று கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். இந்த சம்பவம் நடந்த காலகட்டத் திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தில்லி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஆனால் தில்லி காவல்துறை,”பாஜக தலைவர்கள் பயன்படுத்திய “துரோகி” என்ற இந்தி வார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எவரையும் குறிப் பிட்டு பேசியதாக இருக்க முடியாது என்றும், பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் பேச்சு வன்முறைச் செயல்களைத் தூண்டிவிட முடியாது எனவும் விசா ரணை அறிக்கையுடன் விளக்கம்அளித்து எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தது. தில்லி காவல்துறை அளித்த விசாரணை அறிக்கை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி., பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு ஆதரவாக இருந்ததால் பிருந்தா காரத் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரதாரி சிங், சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு தகுதியான அதிகாரியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று கூறி, தில்லி காவல்துறை விசாரணை அறிக்கை உத்தரவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பு வழங்கினார்.
தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கே.எம். திவாரியுடன் இணைந்து, பிருந்தா காரத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் (2023 ஏப்ரல் 17) திங்களன்று விசாரணைக்கு வந்தது. அனல் பறந்த வாதம் அரசு ஊழியர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யும் நோக்கத்தில் நிலவும் நீதித்துறை தீர்ப்புகள் குறித்து விவாதித்த பிருந்தா காரத் தரப்பு வழக்கறிஞர்,”மேற்கண்ட அரசியல் தலைவர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யாத வரை பாதிக்கப்பட்டோரின் கடந்த கால காயங்கள் ஆறாது. குற்றப் பிரிவு 153 மற்றும் 153A (ஐபிசி)யின் கீழ் வருவதற்கு அறிக்கைகள் மதச் சார்புடையதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பேச்சின் மூலம் வன்முறையை தூண்டுபவர்களாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலே போதுமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்க்கும் அனைத்து நபர்களும் “துரோகிகள்; அவர்களை சுடுங்கள்” என்று பொது வெளியில் நடந்த பேரணியில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு மதத்திற்கு எதிராக அல்லது மற்ற மதங்களுக்கு எதிராக வெளிப் படையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பேச்சு ஆகும். சோதனைகள், இன்னல் கள் பல இருந்த போதிலும் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் எப்ஐஆர்கள் பதிவு செய்யப் படவில்லை”என வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும் என தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.