states

ரயில் விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு என்றால் என்ன?

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் (ஈஐ) என்பது நுண்செயலி அடிப்படை யிலான இன்டர்லாக்கிங் சிஸ்டம். வெவ்வேறு ரயில்களுக்கு இடையே சமிக்ஞைகள் ஒருங்கிணைக்கப்படு வதை உறுதி செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வழித்தடங்களைத் தயாராக வைத்திருக்கவும், ரயில்களுக்கான சமிக்ஞைகளை வழங்கவும் பயன் படுத்தப்படுகிறது. இது தவிர, ரயில்க ளுக்கு சிக்னல் தர ஆக்செல் கவுன்டர்ஸ் (ஏசி) மற்றும் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் (ஏபிசி) தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்துகிறது. ஆக்செல் கவுன்டர்ஸ் தொழில்நுட்பம் சிறப்பு மின்னணு சாதனங்களின் அடிப்ப டையில் செயல்படுகிறது. தண்டவா ளத்தில் ரயில் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் (ஏபிசி) தொழில்நுட்பம் ரயில்தடங்களை வெவ்வேறு தொகுதிகளாகப் பிரிக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின்படி, ஒரு பிளாக்கில் ஒரு ரயில் மட்டுமே இருக்க வேண்டும். அந்த பிளாக்கில் இருந்து அடுத்த பிளாக்கிற்கு ஒரு ரயில் சென்ற பின்னரே அடுத்த ரயில் அந்த பிளாக்கிற் குள் நுழைய முடியும். அதற்கேற்ப சிக்னல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் மனித பிழைகள் மற்றும் தலையீடுகள் குறைக்கப்படுவதை உறுதி செய்யும் வேலையைச் செய்கின்றன. இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் “சிக்னலிங் தோல்விக்கு” வழிவகுக்கும். இதனால், ரயில்கள் தடம் புரண்டு, மற்ற ரயில்க ளில் மோதுவது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

ஒரு ரயில் நிலையத்திற்குள் ஒரு  ரயில் நுழைகிறது என்றால், அந்த ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை தண்டவாளத்தில் எந்த ரயிலும் இருக்கக் கூடாது. அந்தப் பாதையில் உள்ள அனைத்து ரயில்வே கேட்களும் மூடப்பட்டிருக்க வேண்டும், என சில நிபந்தனைகள் உள்ளன. இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இன்டர்லாக்கிங் செய்து வைத்துள்ளனர். இரண்டு, மூன்று லைன்கள் இருந்தால் எந்த லைனில் ரயில் செல்கிறதோ அந்த லைனில்தான் பாயின்ட் செட் செய்திருக்க வேண்டும். முன்பு ரயில்களின் பயண வேகம் குறைவு என்பதால் மெக்கானிக்கல் இன்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப் பட்டது. தற்போது வேகம் அதிகரித்து விட்டதால் எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் முறை பின்பற்றப்படுகிறது.