states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக எம்எல்ஏக்களிடம் ஆவணங்களை

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகி றது. திங்களன்று பாஜக எம்எல்ஏக் கள்,”மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளது. அதனால் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்” என தீர்மானம் கொண்டு வந்தனர்.  ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமன்ற சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் நிராகரித்தார். இதனால் பாஜக எம்எல்ஏக் கள் அவை நடவடிக்கை மற்றும் மற்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை கிழித்து, சபாநாயகருடன் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதனால் திங்களன்று மேற்கு வங்க சட்டமன்றம் பாதிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்கிழமை அன்று  சபாநாயகர் பிமன் பந்தோ பாத்யாய்,”சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு ஆவணத் தையும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு வழங்கக்கூடாது” என மேற்கு வங்க மாநில சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட்டார்.

ஒடிசா சட்டமன்றத்தில்

பாஜக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல் ஒடிசா சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி களான காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு முறைப் படி பதிலளிக்காமல் நகர்ப்புற மேம் பாட்டு அமைச்சர் கே.சி.மொகபத்ரா சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சி களை போன்று பேசினார்.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் ஈடு பட்டனர். பதிலுக்கு பாஜக எம்எல்ஏக் கள் அமளியில் ஈடுபட, இரு கட்சி எம்எல்ஏக்களும் வார்த்தை மோதலுடன், கைகலப்பு ஏற்பட்டது. அவை ஊழியர் கள், காவலர்கள் பாஜக - காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி இருக் கையில் அமர வைத்தனர். ஆனாலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக கிளர்ச்சியில் ஈடுட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.