இந்தியாவில் அதிக ரிக்கும் ஹிந்து தேசிய வாதத்தால், நாட்டின் பன்முகத் தன்மை, மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப் பதாக முன்னாள் குடி யரசுத் தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி மற்றும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கருத்தரங்கு ஒன் றில் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்தியா துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு” என்றும் “அதற்கு வேறு யாரும் சான்றிதழ் தரவேண்டியதில்லை” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ஆவேசப்பட்டுள்ளார்.