states

img

துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் உயிரிழப்பு; அசாம் ரைபிள் படைவீரர்களும் படுகாயம்

இம்பால், ஜூன் 6- மணிப்பூர் மாநிலத்தில் பாது காப்பு படையினருக்கும், ஒரு குறிப் பிட்ட சமூகத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்ஏப்) வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான  மணிப்பூரில் பரவலாக வசிக்கும் “மெய்டெய்” சமூக மக்கள் தற்போது பட்டியல் வகுப்பினராக (Scheduled Castes) வகைப்படுத்தப்பட்டு வாழு கின்றனர். ஆனால் தங்களைப் பழங்குடி யினராக (Scheduled Tribes) அறி விக்க வேண்டும் என்பது “மெய்டெய்” மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனை வாக்கு அரசியலுக்கு சாதக மாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, கடந்த தேர்தலில் (2022) மணிப்பூரில் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்காக “மெய்டெய்” மக்க ளுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டியது. மெய்டெய் மக்களும் அதனை நம்பி மீண்டும் பாஜக-வை ஆதரித்து அரிய ணையில் அமர்த்த, பைரன் சிங் முதல் வராக பதவியேற்றார். அதன்பிறகு “மெய்டெய்” மக்களின் கோரிக்கை யை பாஜக மறந்து விட்டது. இதனால் மெய்டெய் மக்கள் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தை நாடினர்.  இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் பாஜக அரசுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு “மெய்டெய்” மக்களை பழங்குடி களாக அறிவிப்பதை ஏற்கமாட்டோம் என்று மணிப்பூரிலுள்ள 34 துணைப் பிரிவுகளை உள்ளடக்கிய குக்கி-ஜோமி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்த னர். மேலும் “அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கத்தின் (ATSUM)” தலைமையில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் மே 3 அன்று  “பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி” நடத்தினர். சுராசந்த்பூர், மொய்ராங், மோட்பங், மோரே ஆகிய இடங்களில் நடை பெற்ற பேரணியில் வன்முறைவெடித் தது. அடுத்த சில மணிநேரங்களில் மாநி லம் முழுவதும் வன்முறை பரவி பெரும் கலவரமாக மாறியது. ஊரடங்கு, இணையதளம், எஸ்எம்எஸ் என முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் இன்னும் வன்முறை முழுமையாக குறைந்தபாடில்லை.  கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலை யில், தற்போது வன்முறை வேறுபக்கம் திசை திரும்பிவிட்டது. மணிப்பூர் கல வரத்தை ஒடுக்க வந்த எல்லைப் பாது காப்புப் படையினருக்கும், பல்வேறு தரப்பு பட்டியலின, பழங்குடி மக்களி டையேயான மோதலாக மாறியுள்ளது.  இந்த மோதலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சார்ந்த அமைப்புகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்நிலையில், சுக்னோ மற்றும் செரோ பகுதியில் திங்களன்று நள்ளிர வில் (ஜூன் 5) ஏற்பட்ட மோதலில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவு வீரர் ரஞ்சித் யாதவ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மேலும் கூடுதலாக பணி யில் அமர்த்தப்பட்ட அசாம் ரைபிள் பிரிவில் 2 வீரர்களும் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் விமானம் மூலமாக சிகிச்சைக்காக மந்திரிபுக்ரி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக என இந்திய ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் செய்திகுறிப்பில் கூறப் பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்ஏப்) வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.