states

img

கல்வியைக் காவிமயம் ஆக்குவது தவறில்லை இந்தியர்கள் கட்டாயமாக சமஸ்கிருதம் படித்தாக வேண்டும்!

ஹரித்துவார், மார்ச் 21- “கல்வியைக் காவிமயம் ஆக்குவது தவறில்லை” என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசி யுள்ளார். ‘தேவ் சமஸ்கிருதி விஸ்வ வித்யாலயா’வில் அமைதி மற் றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தைத் திறந்து வைத்து, உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை நாம் கொண்டாடு கிறோம். மெக்காலே கல்வி முறையை முற்றிலுமாக நிரா கரிக்க வேண்டிய நேரம் இது. இது கல்வியை உயர்தட்டு மக்க ளுக்கு மட்டுமானதாக மாற்றி வைத்துள்ளது. நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சி நம் மைத் தாழ்த்தப்பட்ட இனமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. ஒரு காலத்தில் உலகம் முழு வதிலுமிருந்து மக்கள் நாளந்தா மற்றும் தட்ச சீலா போன்ற பண் டைய இந்தியப் பல்கலைக்கழ கங்களில் படிக்க வந்தனர். “சர்வே பவந்து சுகினா (அனை வரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதைவ் குடும்பம் (உல கம் ஒரே குடும்பம்) ஆகியவை நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்கள். இன்றும் இவையே இந்தியாவின் வெளி யுறவின் வழிகாட்டும் கொள் கைகளாக உள்ளன. சொந்த அடையாளத்தின் மீதான பெருமிதத்தை இழந்த ஒரு சமூகத்தால் எப்படி முன் னேற முடியும்? நமது வேதங் களை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் சமஸ்கிருதத்தை  கற்க வேண்டும். கல்வியை காவி நிறமாக்குவதாக நாங்கள் குற் றம் சாட்டப்படுகிறோம். கல்வி யை காவிமயமாக்கினால் என்ன தவறு? கல்வி முறையை இந்தியமயமாக்குவது இந்தி யாவின் புதிய கல்விக் கொள் கையின்மையமாகும். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.