states

img

குதிரை சவாரி செய்ததற்காக தலித் மணமகனை தாக்கிய உயர் சாதியினர்

ஆக்ரா, மே 15- தலித் மணமகன் தனது திருமணத் திற்காக குதிரை சவாரி ஊர்வலம் சென்றதை பொறுத்துக்கொள்ள முடி யாமல், தலித் மணமகனை உயர்சாதி யினர் இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தல நகரமான ஆக்ராவில், சோஹல்லா ஜாதவ் என்ற தலித் இளைஞர் தனது திருமணத்திற்காக குதிரை மூலம் ஊர்வலமாக திருமண மண்டபம் நோக்கி சென்றார். செல்லும் வழியிலேயே சோஹல்லா ஜாதவ்வை, சாதி ஆதிக்க வெறிக் கும்பல் வழிமறித்து, “நீ ஒரு தலித், நீ எப்படி ஆடம்பர குதிரையில் செல்லலாம். அதுவும் எங்கள் கிராம பகுதியில் எப்படி செல்ல லாம்? என்ன தைரியம் உனக்கு?” என்று கேள்வி எழுப்பி இரும்புக் கம்பிகளுடன் கடுமையாக தாக்கியது. சோஹல்லா ஜாதவ்விற்கு உதவ முன்வந்த மற்ற தலித் இளைஞர்கள் மீதும் அக்கும்பல் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்தில் இருந்த தலித் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டுள்ளனர்.  மேலும் சாதிவெறி அடங்காத உயர்சாதி கும்பல் சோஹல்லா ஜாதவிற்கு திருமணம் நடைபெறவிருந்த ராதா கிருஷ்ணா திருமண மண்டபத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். புகாரின் அடிப்படையில் ஆக்ரா சதர் பஜார் போலீசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.