states

img

இளைஞருக்கு ‘பைக்’ வாங்கிக் கொடுத்த அகிலேஷ்!

உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிதான் வெற்றி  பெறும், இல்லையென் றால் நான் எனது பைக் கைக் கொடுத்து விடு கிறேன் என்று, அங்குள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா என்பவர், தனது பக்கத்து வீட்டுக்காரர்  பந்தயம் கட்டி யுள்ளார். இதில், அவர் தனது பைக்கை இழந்துள்ளார். இதுதொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் வெளியான நிலை யில், அவதேஷிற்கு ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு  காசோலை வழங்கி, புதிய பைக் வாங்கிக் கொள்ளுமாறும், இனி இதுபோல பெட்டிங்கில் ஈடுபடக் கூடாது என்றும் அகி லேஷ் அறிவுறுத்தியுள்ளார்.