வாஷிங்டன்,பிப்.20- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத் தின் மீது கடந்த 2021 ஜன வரி 6 ஆம் தேதி வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்ட னர். இந்த தாக்குதல் சம்ப வம், அந்த நாட்டின் நாடாளு மன்ற வரலாற்றில் மிக மோச மான நிகழ்வாக பதிவானது. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரி க்காவின் முன்னாள் ஜனா திபதி டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் குளறு படி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே வன் முறையை தூண்டும் வகை யிலான கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி டிரம்ப் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு வை விசாரித்த அனில் மேத்தா என்ற இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நீதிபதி அதனை தள்ளுபடி செய் துள்ளார். வன்முறையாளர் களை டிரம்ப் தூண்டிய தற்கான போதுமான ஆதா ரங்கள் உள்ளதாகவும், முன் னாள் ஜனாதிபதி என்பதற் காக அவருக்கு சட்ட பாது காப்பு அளிக்க முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டிரம்ப் பின் பண்ணை வீட்டில் அமெ ரிக்க அரசின் ரகசிய ஆவ ணங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக, அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் அறிவித் திருந்தது.