states

img

திரிபுரா தேர்தல் களம் பிரதமர் மோடி பேசிய பொய்களும் பேச மறுத்த உண்மைகளும் - கடம்பவன மன்னன்

மூன்று நாட்களுக்கு முன் தேர்தல்  பரப்புரைக்காகத் திரிபுரா சென்ற  பிரதமர் மோடி, வழக்கம் போல தனது வார்த்தை  விளையாட்டுகளையும், வீராவேச முழக்கங்க ளையும் அவிழ்த்துவிட்டு, ஏமாற்று நாடகத்தை  அரங்கேற்ற முற்பட்டுள்ளார்.  சென்ற வாரம் நாடாளுமன்றத்தில், கௌதம் அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான பதிலும் சொல்லாமல், ஒன்பது ஆண்டுகளாக அரைத்துக் கொண்டிருக்கிற மாவையே திரும்ப அரைத்துத் திசைதிருப்ப முனைந்த பிரதமர் மோடி, திரிபுரா தேர்தல்  களத்திலும் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சனியன்று தெற்கு திரிபுராவின் ராதா கிஷோர்பூரிலும், தலாய் மாவட்டத்தின் அம்  பாஸா நகரிலும் பொதுக்கூட்டங்களில் பேசிய  பிரதமர் மோடி, ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இடதுசாரிகளின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்ததாகவும், 2018-ல்  பிஜேபி ஆட்சி வந்தபின் மாநிலத்தில் அமைதி  ஏற்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதாகவும் முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து சரடு விட்டுள்ளார்.   ஆனால் கால் நூற்றாண்டுக்கால இடது  முன்னணி ஆட்சியில் எல்லையோர தீவிரவாத  தாக்குதல்களும் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு, சீரான முன்னேற்றம் இருந்து வந்ததும்,  சென்ற தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியா சத்தில் பிஜேபி ஆட்சியைக் கைப்பற்றிய நாள்  முதல், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்கள் மாநி லம் முழுவதும் பிஜேபி குண்டர்களால் அரங்  கேற்றப்பட்டதும் இப்போது தேர்தல் களத்தில் முக்கியமான விவாதப் பொருளாக மாறி யுள்ளது. 

திரிபுராவில் பிஜேபி நடத்தி வருகிற காட்டாட்சியில், சிபிஎம் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் பல அலுவலகங்கள் அடித்து  நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது, முப்ப துக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டது, மாமேதை லெனின், முன் னாள் முதல்வர் தசரத் தேவ் ஆகியோரது சிலை கள் வெறியர்களால் தகர்க்கப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்தபோது கண்டும் காணாமல் மௌனம் சாதித்த தேசிய ஊட கங்கள், இப்போது தேர்தல் களத்தில் மக்கள் மத்தியிலிருந்தே ஆவேசக்குரல்கள் எழுந்தி ருப்பதை மூடி மறைக்க முடியாமல் உண்மை நிலவரத்தை ஒப்புக் கொள்கின்றன. திரிபுரா தேர்தல் நிலவரம் குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள ‘தி வீக்’ வார ஏடு,  ‘Why BJP is on the Back Foot? என்று தலைப்பிட்டுள்ளதோடு, ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிஜேபி நிகழ்த்திய அத்துமீறல்கள் காரணமாக மக்கள்  மத்தியில் முணுமுணுப்புகள் நிறைய இருப்ப தால், தேர்தல் பிரச்சாரத்தில் அடக்கி வாசிக்க  வேண்டிய கட்டாயத்திற்கு பிஜேபி தள்ளப்பட்டி ருப்பதாகவும் தெரிவித்துள்ளது. (தி வீக், பிப்ரவரி 19,2023). பிஜேபி-யின் வன்முறைக் கலாச்சாரத்திற்கும், ரௌடியிஸத்திற்கும் முற்றுப்புள்ளி  வைத்து, திரிபுராவில் அமைதி யையும், ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பதே இந்தத் தேர்தலில் முக்கிய அம்சமாக இருப்ப தாகவும், அந்தப் புள்ளியிலேயே இடது  முன்னணியும், காங்கிரசும் கரம் கோர்த்திருப்ப தாகவும் ஃபிரண்ட்லைன் ஏடும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.  ஆக மோடிஜி-யின் பரப்புரை வெறும் பொய்யுரை என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தல் கால ஜும்லாவாக, ஐந்  தாண்டு காலமாக, மத்தியிலும், மாநிலத்திலும் பிஜேபியே அதிகாரத்தில் இருப்பதால் இந்த  இரட்டை எஞ்சின் ஆட்சி முறை மூலம் திரி புரா பெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும், ஏரா ளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்ப தாகவும் பிரதமர் மோடி அளந்து விட்டுள்ளார்.  ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது.  2018-ல் ‘விஷன் டாக்குமென்ட்’ என்ற கவர்ச்சி கரமான தலைப்புடன் 299 வாக்குறுதிகளை பிஜேபி வழங்கியிருந்தது.  அவற்றில் மிகப்  பெரும்பாலானவை, எதுவும் நிறைவேற்றப் படாமல் அப்படியே இருப்பதாக நடுநிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்துவரும் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம், கட்டு மானத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாது காப்புத் திட்டம் போன்றவற்றில் சிறு உயர்வு மட்டும், தேர்தல் தேதி நெருங்குகிறது என்ப தால் மிக சமீபமாக முறையே செப்டம்பர் 2022  மற்றும் டிசம்பர் 2022 முதல் அமல்படுத்தப் பட்டுள்ளன. ஐந்தாண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாமல், கடைசி நேரத்தில் கண்  துடைப்பாகச் செய்யும் இது போன்ற செயல்  களால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை  என்கிற ஆணித்தரமான கருத்தை டீக்கடை கள், சிறிய மார்கெட்டுகள் முதல் பேருந்து  நிலையங்கள் வரை எல்லா இடங்களிலும் மக் கள் பேசிக் கொள்வதாக, பத்திரிகையாளர் சுக்ரித் சங்கர் சட்டோபாத்யாயா தெரி விக்கிறார்.

இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கேரளாவில் குஸ்தி போடுவதாகவும், திரிபுரா வில் தோஸ்துகளாக இருப்பதாகவும் ‘மிகப்  பெரிய கண்டுபிடிப்பை‘ அம்பாஸா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  கேர ளாவில் பல தசாப்தங்களாக, மார்க்சிஸ்ட்  கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்ன ணியும், காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய  ஜனநாயக முன்னணியும் செயல்பட்டு வரு வதும், ஜனநாயக வழிமுறைகளுக்கிணங்க அரசியல் போட்டி இவ்விரு அணிகளுக்கி டையே இருந்து வருவதால், பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும் தங்கள் மதவெறிப் பிரச்சா ரத்தை உக்கிரத்துடன் மேற்கொண்டாலும் அங்கே அவர்களால் ஒரு துரும்பைக் கூட  அசைக்க முடியவில்லை என்பதும் எல்லோ ருக்கும் தெரிந்த உண்மை.  அது போல, தேசத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப் பிடித்து, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டும், பாஜகவின் வகுப்பு வாதப் போக்கினை முறியடித்திட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன், கடந்த பல் லாண்டுகளாக, தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட பல மாநி லங்களில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ்  உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் தேர்தல் புரிந்துணர்வு  கொண்டு செயல்பட்டு வருவதும் அனைவரும்  அறிந்த ஒன்று. யாருக்கும் எந்தக் குழப்பமும் இல் லாத இந்த அம்சத்தை ஏதோ பெரிய பிரச் சனை போல மோடிஜி பேசியிருப்பது, திரி புராவில் இடது முன்னணி-காங்கிரஸ் அணி  சேர்க்கை மக்களின் பெரும் வரவேற்பைப்  பெற்றிருப்பதன் அடையாளம் என்றே கூறலாம்.

மேலும், பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் திரிபுராவில் பாலும் தேனும் ஓடு வதாகவும், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் வானத்தையே வில்லாய் வளைக்கப் போவதாகவும் சண்டமாருதம் செய்த பிரதமர் மோடி, தேர்தலுக்கு வெறும் 10 மாதங்களே இருக்கும்போது எதற்காக முத லமைச்சர் பிப்ளவ் தேவ் குமார் அகற்றப் பட்டார் என்பதையும், காங்கிரஸால் தான் எல்லாம் கெட்டுப்போனது என்று மூச்சுக்கு முன்னூறு தரம் முழங்கிக் கொண்டிருக்கும் மோடி, திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் காங்கி ரஸிலிருந்து செயல்பட்டு, மிக சமீபமாக பிஜேபிக்குத் தாவிய 70 வயது மானிக் சாஹா  ஏன் திடீரென முதல்வராக்கப்பட்டார் என்பதை யும் பற்றி தன்னிலை விளக்கமாக ஒரு வார்த்தை  கூட பேசவில்லை.  ஆனால் பிஜேபி-யின் இந்த  கடைசி நேரத்து நாடகம் மக்களிடையே எடு படப் போவதில்லை என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சுபம் கோஷ் என்ற அகர்தலாவைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கூறுகிறார்:  ‘மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லோ ரும் 2018-ல் பிஜேபிக்கு ஓட்டு போட்டோம்.  ஆனால் ஐந்து வருடங்களுக்குள்ளாக எல்லாம் சலித்துவிட்டது.  அவர்கள் மக்க ளுக்கு எதுவுமே செய்யவில்லை.  இந்த முறை  இளைஞர்கள் யாரும் ஏமாற மாட்டோம்.  இந்த  அரசாங்கத்தை அகற்றுவது தான் தேர்தலில் ஒரே நோக்கம்’ (ஃபிரண்ட்லைன் 24.02.2023). அரசியல் ஆய்வாளர் சேகர் தத்தா  ‘திரிபுரா மக்களின் கோபம் தெருக்கள்  தோறும் தென்படுகிறது.  தங்களின் வாழ்வா தாரத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டதால் பிஜேபி ஆட்சி மீது அவர்களுக்கு அதிருப்தி யும், கோபமும் ஏற்பட்டிருப்பது உண்மையே‘  என்று கூறுவதோடு, ‘சிபிஎம்-மும், இடது முன்ன ணியும் காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்தி, மிகவும் கவனமாகக் காய் நகர்த்தியுள்ளார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார். (தி வீக் 19.2.2023). பிஜேபியின் காட்டாட்சியை அகற்றி, மீண்டும் இடது முன்னணியின் ஆட்சியை மலரச் செய்திடும் வகையில் திரிபுரா மக்களின் தீர்ப்பு  அமையப்போவது உறுதி.