states

img

பெண் கவுன்சிலரைக் காலுக்கு மசாஜ் செய்ய வைத்த திரிணாமுல் எம்எல்ஏ!

கொல்கத்தா, ஜன. 28 - ஊராட்சி பெண் கவுன்சிலரை, திரிணாமுல் எம்எல்ஏ ஒருவர், தனது காலுக்கு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம், சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அது, மேற்கு வங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் அசித். இவர்தான் தனது கால்களுக்கு, ஊராட்சி பெண் உறுப்பினர் ரூமாராய் பாலை மசாஜ் செய்ய வைத்துள்ளார். ரூமாராயும் இதனை விரும்பியே செய்ததாக தெரி கிறது. மேலும், எம்எல்ஏ-வுக்கு மசாஜ் செய்யும் அந்த புகைப்படத்தையும் அவர்தான் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ், “இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என் வழிகாட்டி என்று மட்டும் தான் சொல்வேன். அவர் என் கடவுள். அவருக்கு சேவை செய்வதற்காக நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்” என்று ரூமாராய் பதிவிட்டுள்ளார்.

எனினும், அந்தப் புகைப்படம் தற்போது கண்ட னங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. திரிணாமுல் காங்கி ரஸ் எம்எல்ஏ-க்களும், தலைவர்களும் கட்சி உறுப்பினர்க ளை அடிமைகள் போல் நடத்துவதற்கு இந்தப் புகைப் படமே சாட்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதனிடையே, அண்மையில் தான் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டதாகவும், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், ரூமாராய் தனக்கு உதவி செய்தார் என்றும் திரிணாமுல் எம்எல்ஏ அசித் கூறியுள்ளார். மேலும், கட்சியினருக்கு, தான் தந்தையை போன்ற வன் என்றும், அவர்கள் தன்னை கவனித்துக் கொண்டால் அது தவறு இல்லை என்றும், தன்னை ஒரு மூத்த சகோத ரனை பார்த்துக் கொண்டது போலத்தான் ரூமா தன்னி டம் நடந்து கொண்டார். அதில் ஏதும் தவறில்லை என்றும் சமாளித்துள்ளார்.

;