states

img

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் இடதுசாரிகள் மீது வன்முறை ஏவும் திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா, ஜுன் 14- மேற்கு வங்கம்  வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள மினாகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைச் சுற்றி வளைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் தலைவர் சோமா தாஸ் சக்கர வர்த்தி மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நிர்வாகி ராணா ராய் ஆகியோர் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மூங்கில் கம்புகள் மற்றும் கட்டைகளை கொண்டு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ள னர். இதில் சோமா தாஸ் மண்டை உடைக்கப் பட்டுள்ளது; ராணாவின் கையில் முறிவு ஏற்பட்டது. ஜூன் -9 அன்று மாநில தேர்தல் ஆணை யம் கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் அறி வித்த மறுதினம் முதல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் சிபிஎம் வேட்பாளர்கள் மற்றும் கட்சி  ஊழியர்கள் மீது உள்ளூர் கிரிமினல்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கொடூர மான தாக்குதலை நிகழ்த்தி வருகிறார்கள்‌.இருந்த போதிலும் சிபிஎம் வேட்பாளர்கள் துணிச்சலுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

முர்ஷிதாபாத்,கிழக்கு பர்துவான் மற்றும் வடக்கு 24 பர்கானாவில் இடதுசாரிகள், இடது சாரி ஆதரவாளர்கள் மீது திரிணாமுல் குண்டர் கள் தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள் என  சோமாதாஸ் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஜனநாயக மாதர் சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திரிணாமுல் குண்டர்கள் ஆட்சி அதி காரத்தை பயன்படுத்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கே வந்து எதிர்க் கட்சி வேட்பாளர்களை மிரட்டி தாக்குதல் தொடுக்கின்றனர்‌ என  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி கண்டனம் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையம் இந்த தாக்கு தலை எதிர்கொள்ள தயாராக இல்லை என்ப தை இது வெளிப்படையாக காட்டுகிறது என்றார். கடந்த முறை  34% இடங்களில் திரிணா முல் குண்டர்கள் எதிர்கட்சியினரை மிரட்டி  போட்டியிட விடாமல் தடுத்தது போல இந்த முறை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஜூன் 9 அன்று முர்ஷிதாபாத் ராணி நகரில் சிபிஎம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது திரிணாமுல் குண்டர்கள் உள்ளூர் ரவுடிகளுடன் தாக்குதல் நடத்தினர்.  அதே தினத்தன்று மற்றொரு பகுதியில் காங்கிரஸ் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். “உள்ளூர் திரிணாமுல் தொண்டர்கள் எங்களை அவர்களது கட்சி யில் சேர வலியுறுத்தினர்; நாங்கள் மறுத்த தால் என் மகனை அவர்கள் படுகொலை செய்துவிட்டனர்” என்று படுகொலை செய்யப்பட்ட ஃபுல்சந்த் சேக்கின் தாய் செரினா  குற்றம்சாட்டியுள்ளார். திரிணாமுல் குண்டர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்துவது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை முன்வரவில்லை.இடதுசாரிகள் வீதியில் இறங்கி போராடிய பிறகே வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.