states

img

2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ்: பண தட்டுப்பாட்டைத் தீர்க்கும் தந்திரம் -தேசாபிமானயில் ஜி.ராஜேஷ் குமார்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவின் பின்னணியில் இந்திய வங்கிகளில் நிலவும் கடுமையான பணத் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் திருட்டு விளையாட்டும் உள்ளது. அமெரிக்காவில் பெரிய வங்கிகள் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தியாவில் உள்ள வங்கிகளும் முதலீட்டை இழந்தன. தனியார், புதிய தலைமுறை வங்கிகளிடமும், கடன் அளவை உயர்த்த போதுமான நிதி இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றால் பெரும் முதலாளிகளின் கையில் உள்ள நோட்டுகள் வங்கிக ளுக்கு டெபாசிட் ஆகலாம் என ஒன்றிய அரசு கருதுகிறது. இதனால்தான் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்கின்றனர் வங்கித் துறை வல்லுநர்கள். இருப்பினும், மற்ற நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20,000 வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி மார்ச் 31ஆம் தேதி தெரிவித்தது. இதில் 30 சதவிகிதம் முத லீடாக எட்டினால் கூட ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கி களுக்கு கிடைக்கும்.

 பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்குவது அரசின் வருவாயை அதி கரிக்கும் என்று ஒன்றிய அரசு நம்புகிறது. இந்த பணம் தங்கம், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், குறு,  சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறைகள் 2 ஆயரம் ரூபாய் நோட்டுகளை ஏற்கத் தயங்குகின்றன. நோட்டு களை மாற்றுவதில் உள்ள சிரமம் பல வர்த்தகர்களைத் தடுக்கிறது. செப்டம்பர் 30க்குப் பிறகும் நோட்டுகள் செல்லுபடி யாகும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் குழப்பம் நீடிக்கிறது. எவ்வளவு காலம் நோட்டுகள் செல்லு படியாகும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். செப்டம் பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களில் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மண்டல அலுவலகங்களில் மாநி லத்திற்கு ஒன்றோ இரண்டோ தான் உள்ளன.

-தேசாபிமானயில் ஜி.ராஜேஷ் குமார்