புதுதில்லி, அக். 26 - இலவச வாக்குறுதிகள் விவ காரத்தில் அரசியல் கட்சிகள் தங்க ளின் பதிலை அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது. தேர்தல் ஆணையம் குறிப்பி ட்டிருந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 5 எதிர்க்கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு தங்களின் பதிலை முறைப்படி அனு ப்பி வைத்துள்ளன. அதில், “இலவச வாக்குறுதிகள் தொடர்பான அறி விப்புகளை மதிப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை” என்று பெரும்பாலான கட்சி கள் தெரிவித்துள்ளன. ஆனால், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இது வரை பதிலளிக்காமல் உள்ளன. “இலவசத் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது” என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேசினார். முன்ன தாக பாஜக-வைச் சேர்ந்த வழக்கறி ஞரான அஸ்வினி உபாத்யாய, “இல வசங்களை ஒழிக்க வேண்டும். இல வசங்கள் வழங்கும் அரசியல் கட்சி களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று, உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தப் பின்னணியில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அரசியல் கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “தேர்தல் அறிக்கைகளை உருவாக்கு வது என்பது அரசியல் கட்சிகளின் உரி மை என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதேநேரம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தவும் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்கவும் வேண்டி உள்ளதால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிப்பதைக் கண்காணிக்க வேண்டி யது அவசியமாகிறது. எனவே, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சி கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு எங்கிருந்து நிதி வரும் என்பதைக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் விவரிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர ஆலோசிக்கிறோம். இந்த முன்மொழிவு குறித்து அர சியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் தனது பதிலை விரிவாக அனுப்பி வைத்தது. “அர சமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவு, தேர்தல் ஆணையமானது தேர்தல்களை மேற்பார்வையிடுதல் (superintendence), வழிகாட்டு தல் (direction) மற்றும் கட்டுப்பாடு செய்தல் (control) ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்றுதான் அதிகா ரம் (mandate) அளித்திருக்கிறது. தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தாங்கள் மேற்கொள்ளப்போகும் நலத்திட்டங்கள் சம்பந்தமாக மக்க ளுக்கு அளித்திடும் வாக்குறுதிகளை யும், கொள்கை முடிவுகளையும் முறைப்படுத்தும் பணியையோ அல்லது மதிப்பீடு செய்யும் பணி யையோ தேர்தல் ஆணையத்திற்கு அளித்திடவில்லை. இப்போது தேர்தல் நடத்தை விதியில், தேர்தல் ஆணையம் கொண்டுவர உத்தேசித் திருக்கும் திருத்தங்களுக்கான முன் மொழிவுகளும், இதனையொட்டி அது இணைத்திருக்கும் இணைப்புப் படிவத்தில் அரசியல் கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதி கள் மற்றும் கொள்கை முடிவுகளின் விவரங்கள், அதற்குத் தேவைப்படும் நிதித் தாக்கங்கள் (financial implica tions) குறித்துக் கேட்கப்பட்டிருப்ப வை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் வரையறைக்குள் வராதவைகளா கும். மேலும் இவையெல்லாம் அரசி யல் மற்றும் கட்சிகளின் கொள்கை சார்ந்தவைகள் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தது. அதுபோலவே, “அரசியல் கட்சி களின் கொள்கை அறிவிப்புகளை தேர்தல் நேரத்தில் மதிப்பீடு செய்வதற்கும், முறைப்படுத்து வதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை” என்று மேலும் 3 கட்சிகள் தெரிவித்திருந்தன. அகாலிதளம் கட்சி மட்டும், “இலவச வாக்குறுதிகள் அளிப்பதை விரும்ப வில்லை” என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்தை இதுவரை தெரி விக்கவில்லை. இந்த கட்சிகள் இன் னும் சில நாட்கள் அவகாசம்கேட்டுள்ளன.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தாங்கள் மேற்கொள்ளப்போகும் நலத்திட்டங்கள் சம்பந்தமாக மக்களுக்கு அளித்திடும் வாக்குறுதிகளையும், கொள்கை முடிவுகளையும் முறைப்படுத்தும் பணியையோ அல்லது மதிப்பீடு செய்யும் பணியையோ தேர்தல் ஆணையத்திற்கு அளித்திடவில்லை.