பாட்னா, டிச.15- ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிறு வனர் லாலு பிரசாத்தின் இளைய மக னும், பீகாரின் இளம் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி, தனது பள்ளி வகுப்புத் தோழியான ரேச்சல் கோதி னோவை தில்லியில் காதல் திரு மணம் செய்து கொண்டார். ரேச்சல் கோதினா கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தேஜஸ்வியின் திருமணம் சாதி மட்டுமன்றி மதமறுப்புத் திருமண மாகவும் அமைந்தது, பலரின் பாராட்டுதல்களுக்கு உள்ளானது. ஆனால், கிறிஸ்தவப் பெண்ணை மணந்ததற்கு, தேஜஸ்வியின் தாய் மாமன் சாது யாதவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேஜஸ்வி தங்களை (யாதவ வகுப்பினரை) அவமானப்படுத்தி விட்டதாக சாது யாதவ் கூறியிருந்தனர். இதனிடையே, காதல் மனைவி ரேச்சலுடன் தேஜஸ்வி செவ்வா யன்று பாட்னா விமான நிலையத் தில் வந்திறங்கினார். அப்போது, கிறித்தவப் பெண்ணை மணமுடித் தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துள்ள தேஜஸ்வி, ‘‘ராம் மனோகர் லோகி யாவின் கொள்கைகளை பின்பற்றும் என்போன்ற இளைஞர்களின் புதிய சிந்தனைகளில் பாகுபாடுகளுக்கு இடமே இல்லை’’ என்று பொட்டில் அடித்தாற்போல் கூறியுள்ளார். “எனது தாய்மாமா சாது யாதவ், அதீ தக் கற்பனையில் கருத்து கூறியுள் ளார். எனினும், அவர் மீது எனக்கு இன்னும் மதிப்பு இருப்பதால் நான் தனிப்பட்ட முறையில் மாமாவின் மதிப்பு குறையும்படி கருத்து கூற விரும்பவில்லை” என்றும் தெரிவித் துள்ளார்.