states

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் ‘பீமா சுகம் பரிவர்த்தனை’ முன்மொழிவை ரத்து செய்திடுக!

ஹிசார்-கோயம்புத்தூர் வாராந்திர ரயில் வாரம் இருமுறை இயக்க வாய்ப்பில்லை

கோயம்புத்தூருக்கும் ஹிசாருக்கும் இடையே ஓடும் வாராந்திர ரயிலை வாரம் இருமுறை ஓடும்  விதத்தில் நடவடிக்கை எதுவும் தற்போதைக்கு எடுக்கவில்லை  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்  பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், கோயம்புத்தூர்-ஹிசார் இடையே தற்போது வாராந்திர ரயி லாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை வாரம் இருமுறை ஓடக்  கூடிய விதத்தில் மாற்றும் யோசனை அரசிடம் இருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டி ருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், அவ்வாறு முன்மொழிவு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மக்களவையில் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி, டிச.9- இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்கு  முறை ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தேசித்துள்ள ‘பீமா சுகம் பரி வர்த்தனை’ (‘Bima Sugam Exchange’) முன்மொழிவு ரத்து  செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக்  கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. அவசரப் பொது முக்கியத்  துவம் வாய்ந்த பிரச்சனை களை, நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நட ராஜன் பேசியதாவது: இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ), ‘பீமா சுகம் பரி வர்த்தனை’ என்னும் முன் மொழிவினைத் தாக்கல் செய்தி ருக்கிறது. இந்தத் திட்டமானது இன்சூரன்ஸ் துறையில் இப்  போது செயல்பட்டு வரும் இன்சூரன்ஸ் ஊழியர்கள், முக வர்கள், வளர்ச்சி அதிகாரிகளின் நலன்களுக்கு எதிரான ஒரு திட்ட மாகும்.

இன்சூரன்ஸ் துறையானது தற்போது நாட்டில் நாற்பது லட்  சம் கோடி ரூபாய்க்கும் மேல்  சொத்துக்களைப் பெற்றிருக்கி றது. இது இன்சூரன்ஸ் ஊழியர் கள், முகவர்கள், வளர்ச்சி அதி காரிகள் முதலியோரின் அர்ப்ப ணிப்புடன்கூடிய சேவையாக பெறப்பட்டதாகும். மத்தியப் பொதுத்துறை நிறு வனங்களில் இன்சூரன்ஸ் துறை மிகவும் வளமான ஒன்றாக தற்  போது திகழ்ந்துவருகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறது. நாட்டில் கிரா மப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து வருகிறது. ஒன்றிய அரசாங்கத்திற்கும், பல மாநில அரசாங்கங்களுக்கும் கடன்களும் கொடுத்து உதவி  வருகிறது. இதன் பங்குகள்  அனைத்தும் அநேகமாக ஒன் றிய அரசாங்கத்திடமும், மாநில அரசாங்கங்களிடமும்தான் இருந்து வருகின்றனவே தவிர  தனியார் எவரிடமும் கிடையாது.  

இப்போது ஐஆர்டிஏ கொண்டுவந்துள்ள ‘பீமா சுகம்  பரிவர்த்தனை’ ஏற்கப்பட்டால் அதனால் சாமானிய மக்க ளுக்கு எவ்விதப் பயனும் கிடை யாது. தற்சமயம் எல்ஐசி-இன்  கீழ் சுமார் 200 விதமான பாலிசி கள் நடப்பில் இருந்து வரு கின்றன. இனி வருங்காலங்க ளில் ஐஆர்டிஏ கொண்டுவரும் முன்மொழிவின்படி இணையம்  மூலமாகத்தான் பாலிசி எடுத்  துக்கொள்ள வேண்டியிருக் கும். எனவே, சாமானிய மக்கள் தாக்கல் செய்திடும் பாலிசிகள் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப் புகள் அதிகமாகிவிடும். அதே போன்று பாலிசிதாரர்கள் தங்  கள் பாலிசிகள் முதிர்வு பெறு வதை அறிவதற்கான வாய்ப் பையும் இழந்துவிடுகிறார்கள். எனவே, பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாத்திட, அவர்கள் தங்கள் பாலிசி முதிர்வு அடைந்தபின், தொகையினை அவர்கள் முழுமையாகப் பெற்  றிட உதவிடும் விதத்தில், ஐஆர்  டிஏ உத்தேசித்துள்ள பீமா சுகம் பரிவர்த்தனைத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்த அவையின் மூலமாக ஒன் றிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் நாட்டின் பொதுச்சொத்தான 40 லட்சம் கோடி ரூபாயைப்  பாதுகாப்பதோடு மட்டுமல்லா மல், இதனுடன் இணைந்து வேலைபார்த்துக் கொண்டிருக்  கும் 24 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகளின் நலன்  களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன்  பேசினார்.           (ந.நி.)