புதுதில்லி, டிச.7- இந்தியாவில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டிலுள்ள உள்ள அனைவருக்கும் உணவளிக்க வேண்டி யது ஒன்றிய அரசின் கடமை என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக் கத்தின்போது, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் முறையாக சென்ற டைவதை ஒன்றிய அரசு எவ்வாறு உறுதி செய்கி றது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி யுள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு கிடைக் காமல் சிரமப்பட்டனர். அவர்களின் அவல நிலை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனை கள் தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜக்தீப் சோக்கர் ஆகிய 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுவை (Public Interest Litigation - PIL) தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதா டினார். அப்போது, “நாட்டில் தேசிய உணவுப் பாது காப்புச் சட்டம் (NFSA) அமலில் உள்ளது. அனை வருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல் படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் அவதிப்பட்டனர். இந்தச் சட்டம் அமலில் இருந்த போதும் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போனது” என்று பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, என்எப்எஸ்ஏ (National Food Security Act - NFSA) சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர் பயன் பெறுகின்றனர். பொதுமக்களுக்குத் தேவை யான உணவு தானியங்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக ரேசனில் வழங்கி வரு கிறது என்று தெரிவித்தார்.
“2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், தேசிய உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயன்பெற வேண்டிய பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என்று பிரசாந்த் பூஷண் தெரிவிக்க, “2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வளர்ந்து வரும் பய னாளிகளின் பட்டியலில் அதிக நபர்களைச் சேர்ப்பதைத் தடுக்கவில்லை” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட பிரசாந்த் பூஷன், “14 மாநிலங்கள் தங்கள் உணவு தானி யங்களின் ஒதுக்கீடு தீர்ந்துவிட்டதாக பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதே ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கள், “ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை, கொரோனா பொதுமுடக்கத்தின் போது, ஒன்றிய அரசு மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப் பதை உறுதி செய்துள்ளது. எனினும், அத னைத் தொடர வேண்டியதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறினர். மேலும், “யாரும் உணவில்லாமல் பட்டினியாக வெறும் வயிற்றில் உறங்கக் கூடாது என்பது நமது கலாச்சாரம்” என்ற நீதிபதிகள், “தேசிய உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் கடைசி மனிதனுக்கும் உணவு தானியங்கள் சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலி யுறுத்தினர். அதற்காக, “இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக் கையுடன் புதிய விவரங்களை சமர்ப்பிக்கு மாறும்” ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.