புதுதில்லி, பிப். 17 - அதானி குழும ஊழல் முறைகேடு தொடர்பாக நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில், ஒன்றிய பாஜக அரசு மூடி முத்திரையிட்ட உறை மூலம் தாக்கல் செய்த பரிந்துரையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதானி தொடர்பான ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ ஆய்வறிக்கை விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல். சர்மா, விஷால் திவாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர். “ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வறிக்கை யால் அதானி குழுமம் மிகப்பெரிய அள விற்கு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று எம்.எல். சர்மா கோரிக்கை விடுக்க, “ஹிண்டன்பா்க் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று விஷால் திவாரி வலி யுறுத்தினார்.
இந்த மனுக்கள், கடந்த வெள்ளிக் கிழமையன்று (பிப். 10) தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கும் நிலையில், இது போன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நலனுக்காகவும், பங்குச் சந்தையின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம்” என குறிப்பிட்ட நீதிபதிகள், “தேவைப்பட்டால் பங்குச்சந்தை ஒழுங்கு முறைச் சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கலாம்” என்றும் பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ‘செபி’ அமைப்பிற்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தர விட்டனர். இந்த வழக்கு பிப்ரவரி 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘செபி’ மற்றும் ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர், “இந்த விவகாரத்தைக் கையாள பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பும் மற்ற அமைப்புகளும் உரிய திறனைப் பெற்றுள் ளன. எனினும், பங்குச் சந்தையை வலுப்படுத்து வதற்கான வழிகளை ஆராய நிபுணர் குழுவை அமைப்பதில் ஒன்றிய அரசுக்கோ, ‘செபி’ அமைப்பிற்கோ எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதில் இடம்பெறும் நிபுணா்க ளை ஒன்றிய அரசே தேர்வு செய்ய அனு மதிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “நிபுணர் குழுவை அமைப்பது தொ டர்பாக முன்யோசனையின்றி தெரிவிக்கப் படும் கருத்துகள், பங்குச் சந்தையில் முதலீ டுகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பது டன், நிபுணா்கள் குறித்த விவரங்களை வெளிப் படையாகத் தெரிவிக்க முடியாது என்பதால், மூடி முத்திரையிட்ட உறையில் அரசு தாக்கல் செய்யும்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து, நிபுணா் குழு தொடா்பான விவரங்களை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் வழங்குமாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே, காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் உச்ச நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதானி குழும நிறுவனங்களில், ‘எல்ஐசி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு களின் தற்போதைய நிலை என்ன? அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகியவை தங்க ளுடைய முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்க ளுக்கு தங்கள் கடமையைச் செய்யத் தவறி விட்டதா? என்பது குறித்து தெரிய வேண்டும். எனவே, இதுகுறித்து, சிபிஐ, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், செபி, ஆர்பிஐ, எஸ்எப்ஐஓ போன்ற புலனாய்வு அமைப்புகளால் உச்சநீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் நீதிபதியின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை முன்வைத்து, முகேஷ் குமார் என்பவரும், தனியாக ஒரு பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நான்கு வழக்குகளும் வெள்ளிக்கிழ மையன்று (பிப்ரவ 17) தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய பங்குச் சந்தை களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபுணர் குழு அமைப்பது தொ டர்பாக சில பரிந்துரைகளை அரசு அதில் தெரி வித்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்து விட்ட, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதி பதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்தி வாலா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஒன்றிய அரசு தாக்கல் செய்த பரிந்துரைக் கடி தத்தையும் அரசிடமே திருப்பி அளித்துவிட்டது. இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாகவும், நிபுணர் குழுவில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசு அல்லது மனுதாரர்கள் அளிக்கும் பரந்துரையை ஏற்கப் போவதில்லை; நிபணர் குழுவை தாங்களே முடிவு செய்யப் போவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன், உச்ச நீதிமன்றம் அமைக்கும் வல்லுநர் குழுவுக்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.